தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டும் வேலூர் மாவட்டம்!

தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டும் வேலூர் மாவட்டம்!

ஜி. கே.சேகரன்,

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வயதுள்ள வாக்காளர்கள் வீட்டிற்கே சென்று தபால் வாக்கு பெறும் பணியை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்.

வேலூர்மாவட்டம்,வேலூரில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குகளை அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று பெறும் பணியை இன்று தொரப்பாடி பெரியார் நகர் பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்.

 அப்போது முதியோர்களும் ஆர்வமுடன் தபால் வாக்குகளை செலுத்தினார்கள் உடன் வருவாய் கோட்டாட்சியர் கவிதா வட்டாட்சியர் கோபி உள்ளிட்டோர் இருந்தனர்.
 
 மேலும், வாக்குசாவடிகளுக்கு எந்தெந்த வாக்குபதிவு இயந்திரங்கள் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் இன்று ஒதுக்கப்பட்டது 

 மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்பு லெட்சுமி மற்றும்  தேர்தல் பார்வையாளர் ரூபேஷ்குமார் ஆகியோரின் முன்னிலையில்  சட்டமன்ற  தொகுதிகள் வாரியாக பயன்படுத்தபடவுள்ள வாக்குபதிவு இயந்திரங்கள், விவிபாட் பைலட் யூனிட் ஆகியவைகளுக்கான இரண்டாம் கட்ட ரேண்டம் எண்  அரசியல் கட்சிபிரதிநிதிகள் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் நடைபெற்றது.

 இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.