சசிகலாவுக்கு எதிராக முழங்கிய வேலூர் அ.தி.மு.க.வினர்!

சசிகலாவுக்கு எதிராக முழங்கிய வேலூர் அ.தி.மு.க.வினர்!

 கு.அசோக்,

 சென்னையில்  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தின் மீது அமமுகவினர் கற்கள் மற்றும் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி அதிமுகவினர் வேலூரில் ஆர்பாட்டம் நடத்தினர்.

 வேலூர் மாவட்டம், வேலூர் பழைய மாநகராட்சி அருகில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.

   நேற்றைய தினம், அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர்களின் வாகனங்களை வழிமறித்த, அமாமுகவினர் கற்கள் செருப்பை கொண்டு வாகனங்களின் மீது வீசி தாக்குதல் நடத்தினார்.

    இதனை கண்டித்து அதிமுகவினர் கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தினார்கள் இதில் அதிமுக மாவட்ட பொருளாளர் மூர்த்தி உள்ளிட்ட திரளான அதிமுகவினர் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

  இதில் முன்னாள் மா.செ.காகிதப்பட்டரை மூர்த்தி, மு.க.நாகு (எ) நாகராஜ், வழக்கறிஞர்கள் அண்ணாமலை, தாஸ், எம்.ஏ.ராஜா, ஏ.பி.எல்.சுந்தரம், காட்பாடி நாராயணன் மற்றும் மகளிர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பங்கேற்றனர்.

 அப்போது சசிகலா மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.