10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி பெற்று கொடுத்ததாக ஏ.சி.சண்முகம் பேச்சு!

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி பெற்று கொடுத்ததாக ஏ.சி.சண்முகம் பேச்சு!

ஜி.கே.சேகரன், 

 கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் முகாம்களை நடத்தி ஏ.சி.எஸ் மருத்துவக்குழுமம் சார்பில் தனியார்துறைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளோம் - அரியூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பணி ஆணைகளை வழங்கி புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பேச்சு

 வேலூர்மாவட்டம், அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி மஹாலில் ஏ.சி.எஸ் மருத்துவ குழமத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

   இதில் இதில் பங்கு பெற்ற மொத்த நபர்களின் எண்ணிக்கை 3346. இதில் மொத்தமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1956. உடனடி பணி நியமன ஆணை பெற்றவர்களின் விவரம் 876. நிறுவனத்தில் பணி நியமன ஆணைகளை பெற தேர்வு செய்யப்பட்டவர்கள் 1080 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஏ.சி.எஸ் மருத்துவ குழுமத்தின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். இவ்விழாவில் ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 பணி ஆணைகளை வழங்கிய பின்னர் விழாவில்  புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பேசுகையில்  வேலூர்,கேவிகுப்பம் குடியாத்தம்,அனைக்கட்டு ஆம்பூர் வாணியம்பாடி ஆகிய வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தினோம்.

   இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம். கடந்த 3 மாதங்களில் மட்டும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளம் பெண்களும் பணியை பெற்று தந்துள்ளோம்.

  தனியார் துறைகளில் அவர்கள் பணியாற்றுகின்றனர் அரசு கூட இவ்வளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருமா என தெரியவில்லை ஆனால் நாங்கள் செய்துள்ளோம் என பேசினார்.