நர்ஸ் மாணவிக்கு பலான டார்ச்சர்! காரணமானவர்கள் மீது குண்டாஸ் போடுங்க! குரல் கொடுக்கிறார் மருத்துவர் ராமதாஸ்!

நர்ஸ் மாணவிக்கு பலான டார்ச்சர்! காரணமானவர்கள் மீது குண்டாஸ் போடுங்க! குரல் கொடுக்கிறார் மருத்துவர் ராமதாஸ்!

   அ.அரவிந்த்,

  நர்ஸ் மாணவிக்கு பலான டார்ச்சர் கொடுத்தவர்கள் மீது குண்டாஸ் போடுங்க என பா.ம.க. நிறூவனர் மருத்துவர் ராமதாஸ் குரல் கொடுத்துள்ளார்.

  கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஜெ.என்.எஃப்  செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவியை அதன் தாளாளர் டேவிட் அசோக்குமார் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர்.

  அதோடு நில்லாமல், அதை காணொலியில் பதிவு செய்து, அதைக் காட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.

  இதனால் மனமுடைந்த 17 வயது மாணவி, பண்ருட்டி மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

  உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவி கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருவதுடன்மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர், மற்றும் அதற்கு துணையாக இருந்த கல்லூரி பெண் பொறுப்பாளர் உள்ளிட்ட நால்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பிவிடக்கூடிய ஆபத்து உள்ளது.

  ஏனெனில், திண்டுக்கல் முத்தனம்பட்டி தனியார் செவிலியர் கல்லூரியில் மாணவிகள் வன்கொடுமை செய்யப்பட்ட  வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் தாளாளர்  ஜோதிமுருகன் 10 நாட்களில் பிணையில் வெளிவந்து விட்டார்.

   இந்த வழக்கின் குற்றவாளிகளும்  அதேபோல் தப்பிவிடக்கூடாது என்பதால்

மாணவி பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி கைது செய்யப்பட்ட நால்வரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். 

   வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தரமான மருத்துவம் அளித்து அவர் அரசு செவிலியர் கல்லூரியில் படிப்பை தொடர வகை செய்வதுடன், அரசு வேலைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மாணவிக்கு நிவாரண உதவியாக அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

  சம்மந்தப்பட்ட மாணாவி, விழுப்புரம் மாவட்டம் ஆனைக்கவுண்டன் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.