பாதாள சாக்கடையில் வழுக்கி விழுந்த இளைஞர் பலி - காப்பாற்ற சென்றவரும் இறந்த பரிதாபம்!

க.பாலகுரு,
திருவாரூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி இளைஞர் பலி - காப்பாற்ற சென்ற இளைஞரும் பலியான பரிதாபம். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதி.
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மேல வட போக்கி தெரு பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சட்டவிரோதமாக கழிவு நீர் தனியா£ ¢வண்டி மூலம் கழிவு நீர் பாதாள சாக்கடை குழிக்குள் வெளியேற்றப்பட்டது. அப்போது தனியார் கழிவுநீர் வாகனத்தின் ஓட்டுனர் மணிமாறன் வயது 30 மேன்ஹோல் பகுதியில் வழுக்கி பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார்.
அவரைக் காப்பாற்றுவதற்காக வாருகுச்சி தெருவை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் அருணாச்சலம் 27 முயன்றபோது காப்பாற்று முயன்ற போது அவரும் தவறி பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார்.
உடனடியாக அவர்கள் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கே இருவரும் வரும் வழியிலேயே உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் போது உறவினர்கள் திரண்டதால் அங்கு விரைந்து வந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து இருவது உடலையும் சேர்ந்த பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவ குறித்து திருவாரூர் நகர காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.