பள்ளி மாணவி மீது தீராத ஆசை கொண்ட ஆசிரியர்!கதறிய மாணவி!

V.T.Vidya sagar,
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கங்காவரம் மண்டல் பகுதியை சேர்ந்த சலபதி (33). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அதை மறைத்த ஆசிரியர் அதே பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.
உன்னை திருமணம் செய்து கொண்டு ராணி போல நன்றாக வைத்து பார்த்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். அவரது பேச்சில் மாணவியும் மயங்கினார்.
அப்படியிருக்க பள்ளியில் நடந்த இறுதித் தேர்வு முடிந்ததும், அந்த மாணவியை திருப்பதி கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கு கோவிலில் வைத்து தாலி கட்டியுள்ளார். திருமணம் நடந்த ஒரே நாளில் சலபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்து மாணவி அதிர்ச்சியடைந்தார்.
தினமும் நான்கைந்து தடவை உறவு வைத்து டார்ச்சர் கொடுத்துள்ளார். அப்படியிருக்க அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும் மாணவிக்கு தெரியவந்தது.
ஆசிரியர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை அறிந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சலபதி மீது கங்காவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சலபதி மீது போக்சோ பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.