மாந்தீரிகம்-சூன்யம் பொருட்களை அடைப்பதாக கூறி தந்தையை டிரம்மில் வைத்து புதைத்த மகன்!

மாந்தீரிகம்-சூன்யம் பொருட்களை அடைப்பதாக கூறி தந்தையை டிரம்மில் வைத்து புதைத்த மகன்!

 ஜி.கே.சேகரன்,

    தந்தையை கொன்று பிலாஸ்டிக் டிரம்மில் அடைத்து புதைத்த கொடூர மகன் - மாந்தீரிகம்-சூன்ய பொருட்களை அடைப்பதாக நாடகம்-புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது - தப்பி ஓடிய மகன் குறித்து போலீசார் விசாரணை.

 சூன்யத்தை புதைப்பதாக நாடகம் ஆடி தந்தையை கொன்று புதைத்த மகனை போலிசார் தேடி வருகிறார்கள்.

   சென்னை வளசரவாக்கத்தில் இருந்து காவேரிப்பாக்கத்திற்கு ஒரு பெரிய பார்சலோடு வந்தார் ஒருவர்.

  விசாரித்த போது தனக்கு வைக்கப்பட்ட சூனியத்தை மந்திரவாதியின் உதவியோடு எடுத்தததால் அதனை புதைப்பதாக கூறியவர், டெக்னிக்காக தந்தையை புதைத்துவிட்டு தலைமறைவான கொடூரம் அரங்கேறியுள்ளது.

   சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் வசித்து வருபவர் குமரேசன்(78). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவருக்கு  குணசேகரன் என்ற மகனும், காஞ்சனமாளா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.

  குமரேசன் மனைவி இறந்த காரணத்தினாலும், மூத்த மகளான காஞ்சனா கணவர் இறந்து இறந்து விட்டதால் வீட்டின் முதல் தளத்தில் தன் மகளுடன் வசித்து வந்தார்.

    அவரது மகன் குணசேகரன் தரைதளத்தில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

 அப்படியிருக்க சென்னை வளசரவாக்கத்தில் குமரேசனுக்கு செந்தமான வீடுகள உள்ளது. இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் மாதம் 2.5 லட்சம் ரூபாய் வாடகை மாதந்தோறும் வந்துள்ளது.

  தனது ஓய்வூதியம் மற்றும் வாடகை பணத்தை வைத்து குமரேசன் தனது மகள்களுக்கே செலவு செய்து வந்துள்ளதால் மகன் குணசேகரன் தனது தந்தை மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

  இந்த நிலையில் காஞ்சனா கடந்த 15 ஆம் தேதி வெளியே சென்ற போது வீட்டில் குமரேசன் தனியாக இருந்ததுள்ளார் அந்த நேரத்தை பயன்படுத்தி ஆத்திரத்தில் சொந்த தந்தையை கொடூரமாக கொன்று டிரம்மில் அடைத்து அதில் உப்பு கொட்டி மகன் குமரேசன் பதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து காவேரிப்பாக்கத்தில் உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதாக கூறி நிலத்தை பார்வையிட்டுள்ளார்.

 அப்போது வெங்கடேசனிடம் தனக்கு சூனியம் வைத்திருப்பதாகவும், அதனை மந்திரவாதியின் உதவியோடு எடுத்து பிலாஸ்டிக் டிரம்மில் அடைந்துள்ளதாகவும்,  புதிதாக வாங்கும் இடத்தில் புதைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 இதனை நம்பிய வெங்கடேசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆடு மேய்க்கும் பெருமாளின் உதவியோடு காவேரிப்பாக்கம் தஞ்சை நகரில் உள்ள வெங்கடேசனுக்கு சொந்தமான இடத்தில் கடந்த19 ஆம் தேதி பட்டபகலில் பட்டப்பகலில் பிளாஸ்ட்டிக் டிரம்மை புதைத்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் தனது தந்தை வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த காஞ்சனா, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

   குமரேசன் மாயமானது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டிற்கு சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசியபடி அங்காங்கே ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 போலீஸ் விசாரணை மேற்கொண்டபோது காஞ்சனாவுடன் சேர்ந்து தந்தையை தேடிக்கொண்டிருந்த மகன் குணசேகரன் திடீரென மாயமாகியுள்ளார்.

   இதில் சந்தேகமடைந்த போலீசார், குணசேகரனின் மனைவியான வசந்தியிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 18ஆம் தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள வெங்கடேசனை சந்திக்க சென்றதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் உதவியோடு வெங்கடேசன் மற்றும் பெருமாளை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், குமரேசன் தனக்கு சொந்தமான இடத்தை வாங்கி அதில் கடை கட்டுவதற்கு திட்டமிட்டதாகவும், அதற்கு முன்னதாக தனக்கு சூனியம் வைத்திருப்பதால் அதனை மந்திரவாதியின் உதவியோடு எடுத்து டிரம்மில் அடைந்துள்ளதாகவும், அதனைத்தான் வாங்கப் போகும் இடத்தில் புதைக்க வேண்டும் என கூறி தனது இடத்தில் புதைத்ததை தெரிவித்துள்ளார்.

  இதனைத் தொடர்ந்து புதைக்கப்பட்ட குமரேசன் உடலை சென்னையில் இருந்து காவேரி பக்கத்திற்கு எடுத்து வந்த டாடா ஏசி ஓட்டுநர் திருமூர்த்தி, இடத்தின் உரிமையாளர் வெங்கடேசன், உதவி செய்த ஆட்டுக்கார பெருமாள் ஆகியோர் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட நெமிலி வட்டாட்சியர் ரவி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி சட்ட மருத்துவ மருத்துவர் மகேந்திரன் மற்றும் தீபா  காவல் ஆய்வாளர் ஆபிரகாம் புரூஸ் முன்னிலையில்  குமரேசனின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

 இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் தலைமறைவாக உள்ள குணசேகரனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.