மாணவனுக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,
ஜோலார்பேட்டை அரசு மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு செய்த ஆட்சியர் அரசு பள்ளி மாணவனுக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திடிர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் உள்ள மாணவர்களிடம் அமர்ந்து வெஜிடபிள் பிரியாணியை அருந்தினார்.அப்போது கறி சோறு போடுகிறார்களா? என்ன கறி கொடுக்கிறார்கள் என்று மாணவர்களிடம் ஆட்சியர் கேட்டார். சார் சிக்கன் கறி கொடுக்கிறாங்க சார் என்று மாணவர்கள் பதில் அளித்தனர்.
மேலும் மாணவர் விடுதியில் போதிய வசதிகள் உள்ளதா, கழிவறைகள், தண்ணீர், உணவு நல்ல முறையில் செய்து கொடுக்கிறார்களா என மாணவர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
மேலும் விடுதியில் பயிலும் காளியப்பன் பள்ளி உடையில் இல்லாமல் வண்ண நிற ஆடையில் இருந்துள்ளார் இதனை கண்ட மாவட்ட ஆட்சியர் என்ன காரணம் என விசாரித்ததுடன், சமையலுக்கு தேவையான இருப்புகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.