மாணவர்களுடன் மகிழ்ச்சியாக உணவருந்திய ஆட்சியர்!

மாணவர்களுடன் மகிழ்ச்சியாக உணவருந்திய ஆட்சியர்!

 கு.அசோக்,

 வேலூர் பிள்ளையார்குப்பத்தில் உள்ள மாதிரி பள்ளியை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு செய்து மாணவர்களுடன் மகிழ்ச்சியாக உணவருந்தினார்.

 அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர் பயிற்சி மூலம் நீட், ஐஐடி தேர்வுக்கும் பயிற்சிகள் அளிக்கபடுகிறது மழைகால முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான பணிகளும் நடந்து வருகிறது ஆட்சியர் பேட்டி!

 வேலூர்மாவட்டம்,பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது.

  இதில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ,,மாணவிகள் இங்கேயே தங்கி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு அரசின் சார்பில் உணவுகள் அளிக்கப்பட்டு தொடர்ந்து கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

  இதனை நேற்று  வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டார். மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் முறை, மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மாதிரி தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறித்து ஆய்வு செய்தார்.

  பின்னர் மாணவ,மாணவிகளுக்கு தரமான உணவுகள் அளிக்கபடுகிறதா எனவும் ஆட்சியர் ஆய்வு செய்தார் உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்டோரும் ஆசிரியர்களும் இருந்தனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கிராமப்புறத்தில் நன்கு கல்வி கற்கும் மாணவ,மாணவிகள் மாதிரி பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு கல்வி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 அதிலும் இவர்களுக்கு நீட் ,ஐஐடி போன்ற தேர்வுகளில் பங்கேற்கும் வகையிலும் பயிற்சிகள் அளிக்கபடுகிறது.

 மழை அளவு குறித்து மாணி மூலம் ஆய்வு செய்ய உள்ளோம்.

 மழை அதிக அளவாக பெய்ய வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் நகர ஊரக பகுதி மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 கால்வாய்களும் தூர்வார அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஆற்றோரம் மற்றும் ஆற்றினுள் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற அறிவுறுத்தியுள்ளோம்.

  கடந்த ஆண்டு 600 குடிசை வீடுகள் சேதமானது. ஆனால் இந்த ஆண்டு ஊரக வளர்ச்சித்துறை மூலம் வீடுகளை புதுப்பித்துள்ளோம் அதனால் சேதம் ஏற்படாது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க இடங்களும் தயார் நிலையில் உள்ளது. அவர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் விவசாய பயிர்கள் சேதமடையும் வாய்ப்புள்ளது, கிராமங்கள் வாரியாக கணக்கெடுப்பு செய்துள்ளோம் மழை பெய்யும் போது சேதமடைந்தால் அவர்களுக்கு காப்பீடு கிடைக்க வழிவகை செய்யவுள்ளோம். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது அதனை சீர்படுத்த சொல்லியுள்ளோம்.

 இந்த கிராமப்புறங்கள் சாலை செப்பனிடவும் ஒப்பந்தவிடவுள்ளோம் என கூறினார்.