ரேஷன் கடையில் திடீர் சோதனை நடத்திய கலெக்டர்!

கு.அசோக்,
தினம் ஒரு இடத்துக்கு சென்று திடீர் ஆய்வு, சோதனை ஆகியவற்றை மேற்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர் வேலூர் கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன்.
இந்நிலையில் நேற்று சத்துவாச்சாரியில், சிஎம்சி காலனியில் உள்ள கற்பகம் கூட்டுறவு அங்காடியின் ரேஷன் கடையை திடீரென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களின் தரம், இருப்பு, குடி தண்ணீர் வசதி, சுகாதாரம் மற்றும் விலைப்புள்ளி பட்டியல் போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார்.
அதே போல் பகுதி இரண்டிலும், மேலும் ஆவின் பால்பண்ணைக்கு எதிரில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.