திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரவுண்டு கட்டிய லஞ்ச ஒழிப்பு போலிசார்!

திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரவுண்டு கட்டிய லஞ்ச ஒழிப்பு போலிசார்!

 க.பாலகுரு,

திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கு துணை மேலாளர் அலுவலகத்தில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 896 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பணம் பறிமுதல்.ஏழு அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

   தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினர். அதன்படி திருவாரூரில் உள்ள நுகர்பொருள் வாணிபகழக சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள துணைமேலாளர் அலுவலகம் மற்றும் சேமிப்பு கிடங்கு  உள்பட பல்வேறு பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்த கோபால் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் சேமிப்பு கிடங்கு வளாகத்திற்குள் அதிரடியாக  புகுந்து சோதனை செய்தனர்.

 இதனை தொடர்ந்து சேமிப்பு கிடங்கு முன்பக்க கேட் அடைக்கப்பட்டது. அலுவலகத்திற்குள் இருந்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெளியில் இருந்து உள்ளே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. துணை மேலாளர் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை நீண்ட நேரம் சரிபார்த்தனர்.

 மேலும் சேமிப்பு கிடங்கு வளாகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 896 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், தனியார் அரவை ஆலைகளில் இருந்து அரிசி மூட்டைகளை கொண்டு லாரிகளிடம் ரூ. 1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சோதனை நடத்தபட்டது என்றும், மேலும் அலுவலர்கள் இளநிலை உதவியாளர் பெரியசாமி,தரக்கட்டுப்பாடு அலுவலர்  சிவானந்தம் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

  திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.