நித்தியானந்தாவால் ஏமாற்றப்படும் அமெரிக்க நகரங்கள்!

நித்தியானந்தாவால் ஏமாற்றப்படும் அமெரிக்க நகரங்கள்!

ச.பாண்டி,

 திருவண்ணாமலை சாமியார் நித்தியானந்தா, கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி   தனி கொடி, நாணயம் ஆகியவற்றை வெளியிட்டு இந்திய தேசத்தை வாய்பிளக்க வைப்பதாக நினைத்தார்.

அதே போல்  சர்வதேச அளவில் இது பேசுபொருளாக உருவெடுத்த நித்தி அவரது நாடு எங்கிருக்கிறது என்பதை மட்டும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்.

ரப்படியிருக்க சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நேவார்க் நகரம் கைலாசா நாட்டுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் மேற்கொண்டதாம்.

 இது கைலாசாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றே நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

 ஆனால் கைலாசா தொடர்பான சர்ச்சைகளை அறிந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை நேவார்க் நகரம் சமீபத்தில் ரத்து செய்துவிட்டதாம்.

 மேலும், நித்தியானந்தாவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா, 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்களுடன் கலாச்சார பிணைப்பை ஏற்படுத்தும் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போலி தேசமான கைலாசாவுடன் ரிச்மண்ட், விர்ஜீனியா முதல் டேடன், ஓஹியோ, பியுனா பார்க், புளோரிடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்கள் கலாச்சார கூட்டாண்மை ஒப்பந்தம் செய்திருப்பதாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 மேற்படி  போலி சாமியாரான நித்தியானந்தாவால்  வேறு எந்த நகரங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன என ஆரயப்பட்டு வருகிறதாம்.