மக்களை காணப்போகும் ஆளுநர் மாளிகை!

மக்களை காணப்போகும் ஆளுநர் மாளிகை!

 ம.பா.கெஜராஜ்,

  தமிழக ஆளுநர் மாளிகையை மக்கள் பார்வைக்காக திறந்து வைத்து வெட்ட வெளிச்சமாக்கப் போகிறார்கள்.

 தமிழக ஆளுநர் மாளிகை சென்னை கிண்டியில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 500 ஏக்கருக்கு மேல் உள்ள இந்த ஆளுநர் மாளிகையில் ஆளுனரின் அதிகாரப்பூர்வ இல்லம், அவருக்கான மாளிகை அலுவலகங்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குடியிருப்புகள் உள்ளன. தங்குமிடங்கள், ஆளுனரின் செயலகம் ஆகியவை அம்ய்ந்துள்ளன.

  பயன்பாட்டில் உள்ள அவை புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுக் கட்டிடங்கள் எனலாம்.

 ஆளுர்னர் செயலகத்தின் அன்றாட அச்சுத்தேவைகளை நிறைவு செய்யும் பாரம்பரிய நினைவுச் சின்னமாக ஆளுனர் மாளிகையிலுள்ள அச்சகம் செயல்படுகிறது. இருபத்தைந்தாண்டு நினைவு பூந்தோட்டம், நீள் உருண்டை வடிவிலான பூந்தோட்டம் மற்றும் மூலிகைத் தோட்டம் போன்ற ஏராளமான அலங்கார தோட்டங்கள் அந்த மாளிகை வளாகத்தை அலங்கரிக்கின்றன.

   ஆளுனர் மாளிகையின் நுழைவுவாயில் அருகே நீரூற்றுகள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட சுவர்களைக்கொண்ட அலங்காரத் தோட்டம், கிண்டி தேசிய பூங்காவில் உள்ள அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை சித்தரிக்கிறது. மேலும். 'பழைய மெட்ராசின்' ஒருங்கிணைந்த பண்பாடு மற்றும் கட்டிடக்கலை சிறப்புகளின் கம்பீரமான தோற்றத்தை தொடர்ச்சியாக காண்பிக்கும் கலைச்சின்னமாக விளங்குகிறது.

  ஆளுனர் மாளிகையைப் பொருத்தவரை மிகவும் பாதுகாப்பான பகுதி என்பதால் பொதுமக்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

   இந்நிலையில், முதல்முறையாக ஆளுனர் மாளிகையில் நவராத்திரியை முன்னிட்டு கொலு கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியை ஆளுனர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி ரவி ஆகியோர் கடந்த கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி திறந்து வைத்தனர்.

  நவராத்திரி கொலுவைப் பார்வையிட 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆளுனர் மாளிகை வரலாற்றில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு பொதுமக்கள் மாளிகையாக இந்த மாளிகை மாறியது இதுவே முதல் முறையாகும்.

   அதே போல் பொதுமக்களின் பார்வைக்கு ஆளுனர் மாளிகை விரைவில் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியான சூழலில், மக்களை காண அம்மாளிகை ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.