குட்கா விற்ற கடைகளுக்கு 75 ஆயிரம் அபராதம்!

கு.அசோக்,
தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல் வைத்து தலா ஒரு கடைக்கு25 ஆயிரம் வீதம் 75 ஆயிரம் அபராதம் விதிப்பு.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா அவர்கள் உத்தரவின் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் பேரில் நெமிலி மற்றும் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் போலீசார் தலைமையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பன செய்த 3 நபர் மீது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 3 நபர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் ரூபாய் 25,000 வீதம் 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.தொடர்ந்து விற்பனை செய்யும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.