திருப்பூர் மதுபானக் கூடத்தில் டுபாக்கூர் சரக்கு!

சீனிவாசன்,
திருப்பூர் மதுபானக்கூடத்தில் டுபாக்கூர் சரக்கு விநியோகம் செய்யப்படுவதாக மதுப்பிரியர்கள் கண்ணை கசக்குகிறார்களாம்.
திருப்பூர் டூ மேட்டுபாளையம் நால்ரோடு டாஸ்மாக் கடை எண் 1952 மற்றும் பெருமாநல்லூர் சாலை மேட்டுக்கடை பகுதி டாஸ்மாக்கடை 1926 ஆகியவற்றின் அருகே 24 மணி நேரமும் மதுபானக் கூடம் இயங்குகிறதாம்.
அந்த மதுபானக்கூடங்களில் டாஸ்மாக் கடையை விட சரக்கு சேல்ஸ் அள்ளி குவிக்குதாம்.
இந்த மமதையில் அந்த மதுபானக்கடை உரிமையாளர் பலரையும் மிரட்டி வசூல் செய்து வருகிறாராம்.
"யாராவது தட்டிக் கேட்டால், என்னைப் பற்றி செய்தி போடப்போறீங்களா, தயவு செய்து வெளியிடுங்கள், எனக்கு விளம்பரம் கிடைக்கும் என்று என காலரை தூக்கிவிட்டு பாந்தா காட்டுகிறாராம்".
அவரை திருப்பூர் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரே அசைக்க முடியாதாம்?
சரி, விஷயத்துக்கு வருவோம், மேற்படி பந்தா பார்டியின் மதுகூடத்துக்கு தேவையான சரக்கு எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்பது பரம ரகசியமாக உள்ளதாம்.
ஆனால் அவர்கள் டாஸ்மாக்கில் மது வாங்குவதில்லையாம்.
அப்படின்னா..? எல்லாம் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்ட டுபாக்கூர் சரக்காம்.
அடப்பாவமே?