போலிஸை தாக்கி... வெல்டிங் ஷாப்பில் விலங்கை வெட்டி… தப்பிய பலே குற்றவாளி!

போலிஸை தாக்கி... வெல்டிங் ஷாப்பில் விலங்கை வெட்டி… தப்பிய பலே குற்றவாளி!

 ஜி.கே.சேகரன்,

 குற்றவழக்கில் கைது செய்யப்பட்டவரை அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினரிடமிருந்து மீட்டுச்சென்றனர். போகிற போக்கில் வெல்டிங்க் ஷாப்ப்புக்கு சென்று கைவிலங்கை உடைத்து வீசிவிட்டு தப்பினர்.

 திருப்பத்தூர்மாவட்டம்,ஆம்பூர் அருகேயுள்ள துத்திப்பட்டு ஊராட்சியின் தலைவராக இருப்பவர் சுவேதா இவரது கணவர் கனேசன். இவர் பாண்டிச்சேரி,கோயம்புத்தூர்,உள்ளிட்ட தமிழகத்தின் பல மாநிலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

   இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் ஒரு வீட்டில் வயதான மூதாட்டியை ஏமாற்றி வைரம் மற்றும் தங்க நகைகளை அபகரித்துள்ளார்.

   நான் மாநகராட்சி ஊழியர் என ஏமாற்றி அவற்றை திருடிகொண்டு தப்பி வந்துவிட்டார்.

    கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கனேசன் திருடியதை உறுதி செய்துத போலிசார், பல நாட்கள் தலைமறைவாக இருந்த கனேசனை இன்று துத்திப்பட்டு கிராமத்தில் மடக்கி பிடித்து கைகளில் விலங்கை மாட்டினார்கள்.

   இதையறிந்த கனேசனின் ஆதரவாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கோவை காவல்துறையினரை தாக்கி கனேசனை மீட்டு சென்று அங்கிருந்த வெல்டிங்க் ஷாப்பில் கைவிலங்கை நீக்கி பின்னர் அவரை அங்கிருந்து தப்பிக்க வைத்தனர்.

   திருட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையையே தாக்கி மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டி.எஸ்பி சரவணன் தலைமையில் உமராபாத் போலீசார் வந்து அக்கிராமத்தில் முகாமிட்டு காவல்துறையை தாக்கிய கும்பலை கைது செய்து கனேசனையும் கைது செய்ய முயன்று வருகிறார்கள்.

சினிமா கட்சிகள் போல் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.