புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!

புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!

  டி.முகமது இர்பான்,

  தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டின் 49வது தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு உள்ளார்.

  தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் இறையன்பு.  இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 தனிச் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தமிழ்நாடு கேடரில் இருக்கும் அதிகாரிகளில் மிகவும் சீனியர். நெருக்கடியான சூழலில் திறமையாக செயல்படக் கூடியவர் என்ற நற்பெயர் பெற்றிருக்கிறார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக அரசு நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

இவர் வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உதவி ஆட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.