ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை! கலைக்கட்டும் ரம்ஜான்!

கு.அசோக்,
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சந்தையில் 4 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகராட்சி உட்பட்ட வார சந்தை மைதானத்தில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வாகனங்கள் மூலம் ஆடுகளை அதிகாலை 4 மணி முதல் கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
ஆடுகள் உடல் எடை மற்றும் ரகங்களுக்கு ஏற்றவாறு விலைகள் பேரம் பேசப்பட்டு விற்பனையானது.
அந்த வகையில், 2000ஆயிரம் ரூபாயிலிருந்து 17 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் ஆட்டுகள் விற்பனை சந்தையில் 3 மணி நேரத்தில் சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.