நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்த ராஜேந்திர பாலாஜி! மாநில கபாடி போட்டி!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்த ராஜேந்திர பாலாஜி! மாநில கபாடி போட்டி!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீண்ட இடைவெளிக்கு பிறகு பொது வெளிக்கு வந்திருந்தார். பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு கபாடி போட்டி நடந்தது. முதல் பரிசை தட்டிசென்ற அணிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெற்றிகோப்பையை வழங்கினார்.ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரில்,சொக்கநாதன்புத்தூர் (மேலூர்), துரைச்சாமிபுரம் (கீழூர்) இந்து நாடார் உறவின் முறை சார்பாக குத்தாலம் நினைவு கபாடி குழு மற்றும் வியலகன் கிரிக்கெட் கிளப் இணைந்து நடத்திய13-ஆம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. 

தமிழகம் முழுவதும் உள்ள  52 அணிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் போட்டியின் இறுதி போட்டியில் சொக்கநாதன்புத்தூர் அம்மாசிபாண்டியன் அணியும் கிருஷ்ணாபுரம் சிவந்தியின் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் அம்மாசிபாண்டியன் அணி அபாரமாக விளையாடி முதல் பரிசை தட்டி சென்றது.

 அதிமுக  அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பரிசளிப்பு விழாவிற்கு தலைமையேற்று வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

முதல் பரிசுக்கான கோப்பை சொக்நாதன்புத்தூர் அம்மாசிபாண்டியன் அணிக்கும்,2வது பரிசு கிருஷ்ணாபுரம் சிவந்தியின் தாமரை அணிக்கும்,3 வது பரிசு  செங்கோட்டைஏ.எம்.கே.சி  அணிக்கும் வழங்கப்பட்டது.

மேலும் 5 அணிகளுக்கும் கேடயம் மற்றும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. 

விழாவில் அனைத்து உலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், நகர செயலாளர்கள் (வடக்கு) வக்கீல் துரைமுருகேசன், (தெற்கு)பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எம்.குருசாமி, நவரத்தினம், அழகாபுரியான், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ்குமார்,நகர் மன்ற உறுப்பினர் யோகசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.