ஊராட்சி மின் மோட்டர் பழுது! எலெக்டீரிஷின் பலி!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே ஊராட்சியிற்கு சொந்தமான மின்மோட்டரை சரிசெய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர் எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா ¢நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயபிரசாந்த்.
இவர், துத்திப்பட்டு ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் நிலையில், நேற்று அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள பழுதான மின்மோட்டரை சரிசெய்ய சென்றுள்ளார்.
அப்பொழுது மின்மோட்டரை சரிசெய்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக விஜயபிரசாந்தை மின்சாரம் தாக்கியுள்ளது, இதில் விஜயபிரசாந்த் மயங்கி விழுந்த நிலையில், அவரை உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா.
அதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா.
ஊராட்சியிற்கு சொந்தமான மின்மோட்டரை சரிசெய்துக்கொண்டிருந்த தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..