குரோமியம் கழிவுகளை அகற்றாததை கண்டித்து பாமக போராட்டம்!

கு.அசோக்,
இராணிப்பேட்டையில் குரோமியம் கழிவுகளை அகற்றாததை கண்டித்து விரைவில் பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்துவது என அந்த மாவட்ட பாமக மேற்குமாவட்ட பொதுகுழு கூட்டத்தில் தீர்மானம் நீறைவேற்றப்பட்டது.
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொது குழு கூட்டம் மாவட்டத்தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது,
இதில் பாமக மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம் முன்னாள் மாவட்ட செயலாளர் முரளி,சிறப்பு அழைப்பாளராக, பசுமைதாயகம் மாநில துணை பொதுச் செயலாளர் பொன் மலை உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
இப்பொதுக் குழுவில் மாமல்லபுரத்தில் மே 11 ஆம் தேதி நடக்கவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டில் இராணிப்பேட்டை மேற்குமாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வது எனவும்,
மற்றும் சமுதாய இளைஞர்களை இம்மாநாட்டில் அதிக அளவு பங்கேற்க செய்வது எனவும், இராணிப்பேட்டை மாவட்ட சிப்காட் பகுதியில் உள்ள குரோமியம் கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குரோமியம் கழிவுகளால் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நோய் தொற்று ஏற்படுகிறது பலமுறை அரசுக்கு சொல்லியும் நடவடிக்கை எடுக்காததால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விரைவில் ஆர்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.