அக்னி பாத் வெப்சைட்டில் தவறான தகவல்! மாணவர்கள் ஏமாற்றம்!! போலிசார் செய்த உதவி!!

அக்னி பாத் வெப்சைட்டில் தவறான தகவல்! மாணவர்கள் ஏமாற்றம்!! போலிசார் செய்த உதவி!!

க.பாபு,

  அக்னி பாத் வெப்சைட்டில் தவறான தகவல் அளிக்கப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்து வெளியேறினர்

 இது பற்றின விவரம் வருமாறு,

தற்போது வேலூரில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

 இதற்காக "ஜாய்ன் இந்தியன் ஆர்மி" என்கிற வெப்சைட் உள்ளது. இதில் பல்வேறு தகவல்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

 இந்திய ராணுவத்தின் அதிகார பூர்வமான மேற்படி வெப்சைடில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் உள்ளிட்ட பிசிகல் டெஸ்ட் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களை ஆவணங்கள் சரியில்லை என்று சொல்லி கழித்துக் கட்டியிருக்கிறார்கள்.

  அதற்காக "ராலி நோட்டிபிகேஷனை"க்காட்டி அதன்படிதான் ஆவணங்கள் கொண்டுவரவேண்டும் என்று காரணம் தெரிவித்துள்ளார்கள்.

  ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைப் பொறுத்தவரையில் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு ராணுவத்துக்கு ஆள் எடுக்கப்பட்டு தேர்வு குளறுபடிகளால் அந்த செலக்ஷனே நின்றுவிட்டது.

  இந்நிலையில், இந்த அக்னிபாத் தேர்வில் ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்டவைகளில் தேர்வாகியும் ஆவண குளறுபடிகளால் பணியில் சேர இயலாமல் போனது. இப்படி ஒரே நாளில் மட்டும் 2,800/பேரை ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள்.

 அப்படி வெளியேற்றப்பட்டவர்களுக்கு வயதின் அடிப்படையில் இனி ராணுவத்தில் சேர இயலாதபடிக்கு வாய்ப்பு பறிபோனது.

  இளைஞர்களின் ராணுவ சீறுடை கனவை இப்படி கலைத்துவிட்டனர்.

 ஆகவே தற்போதும் தேர்வு நடைபெற்றுவருவதால் அதில் பங்கேற்பவர்கள் "ஜாய்ன் இந்தியன் ஆர்மி" மற்றும் "ராலி நோட்டிபிகேஷனை" ஆகிய இரண்டு  விளம்பரங்களையும் பார்த்து அதன்படி ஆவணங்களை Affidavit+ Admit Card+ police Verification Certificate+ 10th marksheet are mandatory to entering Ralley site.

1.10 photo

2.Admit card

3.affidavit original

4.10th marksheet original+Xerox

5 police Verification Certificate original

6.unmarried certificate original

7.character Certificate issued by village Sarpanch original

8.Aadhar xerox

9.Pan xerox

10.Bank Book xerox

11.Driving Licence Xerox  கொண்டு சென்று ராணுவத்தில் இணையலாம்.

குறிப்பு:-"ஜாய்ன் இந்தியன் ஆர்மி" வெப்சைட்டில் போலிஸ் வெரிபிகேஷனை கேட்க்கப்படவில்லை.  கடைசி நேரத்தில் அதை அறிந்த இளைஞர்கள் இரவு பகலாக சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் நின்று என்.ஓ.சி.பெற்றனர். இதில் காவல் துறையை வெகுவாக பாராட்டியே தீர வேண்டும் இரவோடு இரவாக அனைத்து இளைஞர்களுக்கும் என்.ஓ.சி. அளித்து வாழ்த்தி வழியனுப்பினர்.

முக்கிய குறிப்பு:-இவர்கள் செய்த பிழையால் பல இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்ட நிலையில் குளறுபடிக்கு பொறுப்பேற்று தற்போது வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் நலமாக இருக்கும் என்று பலரும் விருப்பப்படுகிறார்கள்.

ஏன்னா சீருடைதான் வாழ்நாள் கனவு என்று இருந்தவர்களுக்கு இப்படி உதவி கனவை நிறைவேற்றி வைக்கலாமே.