நிறுவனர் ஐடா அம்மையாரை மறக்க வேண்டாம் ப்ளீஸ்:-

நிறுவனர் ஐடா அம்மையாரை மறக்க வேண்டாம் ப்ளீஸ்:-

மதன்,

ஐடா ஸ்கடர் அம்மையாரின் பிறந்த தினம் 09.12.1870. இறந்த தினம் 24.05.1960.

அம்மையாரின் கல்லறைத் தோட்டம், வேலூர் மாவட்டம், வேலூர், டோல்கேட் பகுதியிலுள்ள கிறிஸ்துவ கல்லறை தோட்டத்தில் உள்ளது.

திருமதி ஞானாம்பாள் என்ற அம்மையார் தான், சிஎம்சி வேலூரின் முதல் கம்பவுண்டர் ஆவார்.மாத்திரைகள், பொடிகள் மற்றும் கலவைகளை அளந்து கலக்க வேண்டிய நேரத்தில், ஞானாம்பாளுக்கு ஒரு கம்பவுண்டராக பயிற்சி அளித்தது சி.எம்.சி நிறுவனர் டாக்டர் ஐடா ஸ்கடருக்கு அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

 பல வருடங்களுக்குப் பிறகு 1918 இல் சி.எம்.சி மருத்துவப் பள்ளி திறக்கப்பட்டபோது, முதல் பார்மசி மாணவர்களுக்கு ஜீனெட் பெட்ரி என்ற அமெரிக்க பெண்மணி தான் வேதியியலைக் கற்பித்த பார்மசிஸ்ட் ஆவார்.

 இந்த உலக மருந்தக தினத்தன்று, மருந்தாக பிரிவுடன் தொடர்புடைய அனைவரையும் வாழ்த்த விரும்புகிறோம். இந்த ஆண்டு உலக மருந்தக தினத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, ஞானம்மாள் முதல் அனைத்து மருந்தாளுநர்கள் வரை உள்ள அனைவருமே எப்போதும் நம் ஆரோக்கியத்திற்காக உதவுகின்றனர் என நம்பப்படுகிறார்கள்.

 இப்படி ஞானம்மாளை நினைவு கூறுபவர்கள், சி.எம்.சி.மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை நிறுவிய சோபியா ஐடாஸ்கடர் அம்மையாரின் நினைவு தினமான மே மாதம் 24 ஆம் தேதியை மறந்தே போனார்கள்.

 அமெரிக்காவைச் சேர்ந்த சோபியா ஐடா ஸ்கடர் அம்மையார் அவர்கள் வேலூர் மாநகரில் தோற்றுவித்த மருத்துவ நிறுவனங்கள் மூலம் பலவற்றை அனுபவித்து வாழ்ந்து வருவோர் அவரது பிறந்த தினமான டிசம்பர் 9 ஆம் தேதியை போற்றுவது போன்றே, அவர் மறைந்த மே-24 ஆம் தேதியன்று அவரது கல்லறை தோட்டத்தில் மரியாதை செலுத்தினால் கூடுதல் சிறப்பல்லவா?