ரேஷன் கடைகள் - பள்ளிகட்டிடங்களை ஆய்வு செய்த ஆட்சியர்!

ரேஷன் கடைகள் - பள்ளிகட்டிடங்களை ஆய்வு செய்த ஆட்சியர்!

 ம.பா.கெஜராஜ்,

 வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் திருமதி.ஆர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ராமகிருஷ்ணன், உதவி இயக்குநர் (தணிக்கை) திரு.சுப்ரமணியன் மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் திரு.ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

  அதே போல்   கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், மூஞ்சூர்பட்டு ஊராட்சி,  நாயக்கனேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 28. 35 லட்சம் மதிப்பில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் அமைக்கும் பணிகளையும்,  ரூ. 6.5 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகளை புதுப்பிக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.,  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  மேலும், அடுக்கம்பாறை ஊராட்சி, மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் ரூ. 8.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொது விநியோக கடையையும், துத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 23. 52 லட்சம் மதிப்பில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.,  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த  ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி க.ஆர்த்தி,  வேலூர் வட்டாட்சியர் திரு. செந்தில்,  கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. ராஜன் பாபு,  திருமதி கௌரி உட்பட பலர் உடன் இருந்தனர்.