எங்கேயாவது வன்டியை விடு! துட்டை இங்கே தள்ளு!தி.மலையில் அடாவடி வசூல்!

ச.பாண்டி
திருவண்ணாமலையில் ரயில்வே நிலையத்தில் டூ வீலர் மற்றும் கார் ஆகியவற்றுக்கு பார்க்கிங் வசதி உல்ளது. அதற்காக தனியாக இடமும் ஒருக்கப்பட்டிருக்கு.
ரயில் பயணிகள் அங்கே தான் வண்டியை நிறுத்துகிறார்கள், அதற்காக கட்டணமும் பார்கிங் உரிமையாளருக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் வெளியே வண்டி நிறுத்திவிட்டு எனது உறவினரை வரவேற்பதற்காக ஒருவர் காத்துக் கொண்டிருந்தார்.
அதற்காக அவரிடம் டூ வீலருக்கு பத்து ரூபாய் கட்டணம் என்று வசூல் செய்துவிட்டனர்.
பார்க்கிங்கில் வண்டியை நான் நிறூத்தவேயில்லை, அங்கு விட்டால் தானே வசூலிக்க வேண்டும் இது ரயில் நிலையத்தின் வெளியே நிறுத்தியதற்கு பத்து ரூபாய் டோக்கன் போட்டு வாங்குகிறார்கள் இது முறையா என்று பத்து ரூபாய் இழந்தவர் கேள்வி கேட்கிறார்.
இது மாதிரி ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான ரூபாயை அடாவடியாக வசூல் செய்கிறார்களாம்.