மாநகராட்சி ஆணையருக்கே இந்த கதியா?

மாநகராட்சி ஆணையருக்கே இந்த கதியா?

ம.பா.கெஜராஜ்,

 நேற்று துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகருக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்றிருந்தார். அப்போது ஒரு சிறு விபத்தில் அவரது உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தனது காரிலேயே அங்குள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ராதாகிருஷ்ணன். ஆனால், அந்த மருத்துவமனையில் மருத்துவர் எவருமே  இல்லை.

 இதனால் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். மாநகராட்சி, நகராட்சி மருத்துவமனைகளில் எந்நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளில் கூட மாநகராட்சி மருத்துவமனையில் மருத்துவர் இல்லாதது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோல, 108 ஆம்புலன்ஸுக்கு மாநகராட்சி ஆணையர் போன் செய்த போதும், ஆம்புலன்ஸ் வரவில்லை.

   இதனால் நொந்து போனாராம் மாநகராட்சி ஆணையர்.