மாணவர்களுக்கு பொது இடத்தில் தோப்புகரணமா? தீயணைப்பு அலுவலர்களை கண்டிக்கும் மனித உரிமை அமைப்புகள்!

மாணவர்களுக்கு பொது இடத்தில் தோப்புகரணமா? தீயணைப்பு அலுவலர்களை கண்டிக்கும் மனித உரிமை அமைப்புகள்!

தி.வினோத்,

  மாணவர்களுக்கு பொது இடத்தில் தோப்புகரணமா என்று மனித உரிமை காப்பாளர் பொங்கியெழுந்துள்ளார்.  திருத்தணி காந்தி ரோட்டில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திருத்தணி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் சில மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்புக்கு செல்லாமல் ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பூங்கா ஆகிய இடங்களில் காணப்பட்டுள்ளார்கள்.   அந்த வகையில் நேற்று காலை அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் பிளஸ்- 1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 3 பேர் திருத்தணி மலைக் கோவிலில்லிருந்தனர்.

சும்மா வாசியுங்களேன்:-அரசு கொடுத்த நிலங்களை ஆட்டையை போட்ட நிலச்சுவாந்தார்! மீட்டுதரக்கோரி மக்கள் போராட்டம்!

   அப்போது மலைக்கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடத்த வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அந்த மாணவர்களிடம் விசாரித்தார். அவர்கள் வகுப்புக்கு செல்லாமல் இவ்வாறு வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் 3 பேருக்கும் 15 முறை தோப்புகரணம் போடும்படி நூதன தண்டனை கொடுக்கப்பட்டது.

 இனிமேல் பள்ளிக்கு ஓழுங்காக செல்வேன் என்றும் அவர்கள் உறுதி மொழி எடுத்தனர். பின்னர் மாணவர்கள் 3 பேரையும் தீயணைப்பு அலுவலர் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த நூதன தண்டனையை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் பார்த்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.

   இந்த விவகாரம் தற்போது பிரச்சனையாகியிருக்கிறது.

அதாவது இந்த தகவல் மனித உரிமை காப்பாளரான வேலூர் பிலிப் என்பவரின் பார்வைக்கு பட்டவுடன், அவர் இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் எழுத உள்ளதாக தெரிவித்தார்.

  மேலும் அவர் தெரிவிக்கையில், மாணவர்களுக்கு பனிஷ்மென்ட் கொடுக்க இவர்களுக்கு யார் அந்த அதிகாரத்தை அளித்தது. முறையாக அவர்களின் பெற்றோருக்கோ அல்லது பள்ளிக்கூடத்துக்கோ அல்லவா தெரிவித்திருக்க வேண்டும்.

  அதைவிடுத்து இன்று பொது வெளியில் இந்த விஷயம் வலம் வருவதற்கு அரசு அலுவர்களோ காரணமானது கண்டிக்கத்தக்கதாகும். அவர்களின் செயல் தவறான செயலாகும். ஆகவே இதற்கு சம்மந்தப்பட்ட தீயணைப்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரும்வோம் என்றார்.