வங்கி பரிவர்த்தனை தொடர்பாக வேலூரில் இ.டி ரைடு!

ஜி.கே.சேகரன்,

வேலூரில் பிரபல சாய்சுப்ரபாதம் மற்றும் தாம்பூலம் ஈவண்ட்ஸ் உரிமையாளர் மேத்தாகிரி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை 9 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.

  வேலூர்மாவட்டம், காட்பாடி அடுத்த தொண்டான்துளசி பகுதியில் வசித்து வரும் தொழில் அதிபர் மேத்தா கிரி இவர் சாய்சுப்ரபாதம் ஹோட்டல்களின் உரிமையாளர் மற்றும் தாம்பூலம் ஈவண்ட்ஸ்  மற்றும் பாலாஜி புட்ஸ் மற்றும் எய்ம் சிட்டி லேண்ட் பிரமோட்டர் ஆகிய நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

 இவருடைய அலுவலகம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ளது. நேற்று அங்கு அமலாக்கத்துறையினர் சென்றனர். அப்போது அலுவலக கட்டிடம் பூட்டியிருந்தது.

 ஆகவே அவர்களால் சோதனை நடத்த இயலவில்லை.  பின்னர் தொண்டன் துளசி பகுதியில் உள்ள அவருடைய இல்லத்தில் அதிகாலை ஏழு மணி முதல் அமலாக்கத் துறையினர் ஐந்து பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

 பின்னர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் மற்றும் கணக்காளர் ஆகிய இருவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 மேத்தா கிரியிடம் வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் சொத்து விவரங்கள் நகை வாங்கப்பட்ட விவரங்கள் ஆகியவற்றை விசாரித்து ஆவணங்களை சேகரித்துக் கொண்டனர்.

 காலை முதல் நடைபெற்ற சோதனை நான்கு மணி அளவில் முடிவடைந்தது. ஒன்பது மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

 சோதனை முடிந்த பின் வெளியே வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆவணங்கள் அடங்கிய பையை எடுத்துச் சென்றனர்.

 அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 இந்நிலையில் வங்கி கணக்கில் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து அமலாக்க துறையினர் இந்த சோதனையை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.