மழை மற்றும் செல் பூச்சியின் தாக்கம்:- "மா" விவசாயம் பாதிப்பு!

எம்.ரபிக் ராஜா,
பெரியகுளத்தில் தொடர் மழை மற்றும் செல் பூச்சியின் தாக்கம் காரணமாக மா விவசாயம் பாதிப்பு : விவசாயிகள் கவலை : அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை :
தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் மா விவசாயம் இருந்து வருகின்றது. இங்கு சுமார் 50,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மா விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகவும் இருந்து வருகின்றது
இப்பகுதியில் காசா லட்டு, பங்குனவள்ளி, கல்லாமை, செந்தூரம் , மல்கோவா, கிரேப்ஸ், போன்ற வகைகள் மாமரங்கள் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே மா விவசாயம் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றது.
ஆனால் இந்த ஆண்டு பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மா மரங்களில் அதிக பூக்கள் பூத்தது. ஆகவே, விளைச்சல் அமோகமாக இருக்கும் என மா விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
மேலும் மரங்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் வகையிலும், மாம்பூக்களில் தேன் விழுவதை கட்டுப்படுத்தும் வகையிலும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப சுமார் 15 நாட்களுக்கு ஒரு முறை மருந்து தெளிக்கும் பணியில் தீவிரம் காட்டினர்.
பின்னர் பூ பிஞ்சாகும் வரை காத்திருந்து அவற்றில் எந்த ஒரு நோயும் தாக்காதிற்கும் வகையில் அவ்வப்போது மருந்துகள் அடித்து வந்தனர்.
இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலில் தாக்கத்தினால் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக மா மரங்களில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்புக்கு வகையில் மாமரத்தில் பூத்திருந்த பூக்கள் கருகி உதிர்ந்தன.
அதே நிலையில், பிஞ்சுகளில் ஒரு வகையான செல் பூச்சிகளின் தாக்கத்தினாலும், நோய்த் தொற்று ஏற்பட்டு மரத்தில் இருந்த மாங்காய் பிஞ்சுகள் கருகி உதிர்ந்து கீழே விழுந்து வருகின்றன.
அப்படியிருக்க தொடர் மழை மற்றும் செல் பூச்சியின் தாக்கத்திலிருந்து மா விளைச்சளை காப்பாற்ற, செல்பூச்சிகளை கட்டுப்படுத்த சரியான மருந்துகள் இல்லை என, விவசாய துறையினர், தோட்டக்கலைத் துறையினர் மற்றும் மருந்து கடை உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எனவே மா விவசாயத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமாய் இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.