போஸ்ட் ஆபிஸ்களில் தங்க பத்திரம் விற்பனை!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
போஸ்ட் ஆபிஸ்களில் தங்கப்பத்திரம் விற்பனை நேற்று திங்கள்கிழமை (நவ. 29) முதல் டிசம்பா? 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து தபால் துறை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு தங்கப்பத்திரத் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடுகிறது. அஞ்சலகங்கள் மூலம் தங்கப்பத்திரம் விற்பனை நேற்று திங்கள்கிழமை முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும்.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,791 ஆகும்.
அஞ்சலகம் மற்றும் அனைத்து துணை அஞ்சல் நிலையங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை நடைபெறும். தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும்.
தனி நபர் ஒரு நிதியாண்டுக்கு குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது ஒரு மிக சிறந்த வாய்ப்பு.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு பான் கார்டு கட்டாயம் தேவை. அதனுடன் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை கொடுத்து தங்கப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என
கூறப்பட்டுள்ளது.