விருதை விரட்டிய தலைமைச் செயலாளர் இறையன்பு!

விருதை விரட்டிய தலைமைச் செயலாளர் இறையன்பு!

  ஜி.சாந்தகுமார்,

 தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ்  தனக்கு அளிக்கப்படுவதாக இருந்த விருதை  புறக்கணித்துள்ளார்

 வேளாண் பல்கலைக்கழகத்தில் 'மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருது' தனக்கு அளிப்பதைத் தவிர்க்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளர் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்..

 அவர் இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வி.கீதாலட்சுமிக்கு  எழுதிய கடிதத்தில் “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேன்மைமிகு முன்னாள் மாணவர்கள் விருதை எனக்கு வழங்கவிருப்பதுகண்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். எனது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற மாணவர்களுக்கு மேலும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விருப்பம் கொள்கிறேன்.

 ஆனால், நான் இப்போதைய நிலையில் இருந்து கொண்டு தாங்கள் அளிக்கும் விருதைப் பெறுவது என்பது பதவிக்கான மரபுசர்ந்த நிலைகளைக் கடந்ததாகி விடும். எனவே, விருதை எனக்கு அளிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என அந்த கடிதத்தில் இறையன்பு ஐஏஎஸ் தெரிவித்துள்ளர்.

 இவர் அல்லவா அரசு தலைமை அலுவலர்.