ஓடிப்போன மனைவியை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஐந்து லட்சம் பரிசாம்!

ம.பா.கெஜராஜ்,
வேறு ஒருவருடன் ஓடிய மனைவியை கண்டுபிடித்து தாருங்கள் ரூ.5,00,000 பரிசு தருகிறேன் என்று கணவர் ஒருவர் அவரதுய் முக நூல் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது பற்றின விவரம் வருமாறு,
மேற்குவங்க மாநிலம் பிங்கலா எனும் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஐதராபாத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவியும், குழந்தையும் அவருடைய பெற்றோருடன் சொந்த கிராமத்தில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவருடைய மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு வேறு ஒருவருடன் ஓடிவிட்டார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் பல்வேறு இடங்களில் தனது மனைவி, குழந்தையை தேடிப் பார்த்துவிட்டு இறுதியாக பேஸ்புக்கில் உதவியை நாடியிருக்கிறார்.
அந்த நபர். தனது பேஸ்புக் பக்கத்தில் மனைவி, குழந்தையை தேடி அலைகிறேன், யாராவது கண்டுபிடித்து கொடுத்தால் 5,000 ரூபாய் பரிசு தருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், டிசம்பர் 9ம் தேதி நள்ளிரவு என் மனைவி, குழந்தையுடன் வீட்டு ஜன்னலை உடைத்து அதன் வழியாக வேறு ஒரு நபருடன் தப்பிச் சென்றிருக்கிறார். அந்த நபர் என் மனைவிக்கு மொபைல் போன் வாங்கி தந்திருக்கிறார். அந்த மொபைல் மூலம் இருவரும் நள்ளிரவு நேரங்களில் ரகசியமாக பேசி வந்துள்ளனர். அன்றைய தினம் நம்பர் பிளேட் இல்லாத டாடா நானோ கார் ஒன்று வீட்டின் அருகே வந்துள்ளது. என் மனைவியால் தனியாக ஜன்னலை உடைக்க முடியாது.
காரில் வந்த அந்த நபர் தான் ஜன்னலை உடைக்க உதவியிருக்க வேண்டும். என் மனைவி வீட்டிலிருந்த நகை, பணம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் போன்றவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார். என் மனைவி படிக்காதவர். அந்த நபர் அது வாங்கித் தருகிறேன், இது வாங்கித் தருகிறேன் என போலியாக அளித்த வாக்குறுதிகளை நம்பி அவருடன் சென்றிருக்கலாம். அவரை பாதியில் இறக்கி விட்டால் கூட வீட்டுக்கு வரத் தெரியாது.
வீட்டில் யாரும் மொபைல் பயன்படுத்துவது கிடையாது. அந்த நபர் வாங்கிக் கொடுத்த மொபைல் போன் தான் எல்லாத்துக்கும் காரணம்.
வீட்டில் உள்ள அனைவரும் என் மனைவி, குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம். அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5,00,000 ரூபாய் பரிசு தருகிறேன்" இவ்வாறு அந்த நபர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.