திருவண்ணாமலை தேரோட்டத்தில் பாய்ந்த மின்சாரம்! மின்சாரம் இல்லை யூபிஎஸ் என கலெக்டர் தகவல்!
P.R..ஆனந்த்.
திருவண்ணாமலை தேரோட்டம் நடைபெற்ற போது திடீரென பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.லிது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, 2 பெண்களே பாதிப்பு என கலெக்டர் தெரித்திருக்கிறார்.
ஆண்டுதோறும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு முன்பு தேரோட்டம் நடைபெறும் என்பதும் இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்படியிருக்க திருவண்ணாமலை தேரோட்டம் நடந்த போது திடீரென தேரின் அருகில் இருந்த கடையிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பக்தர்கள் சிலர் மீது மின்சாரம் பாய்ந்ததால் காயம் ஏற்பட்டதாகவும் இது குறித்து தகவல் அடைந்த காவல்துறையினர் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி பக்தர்களை மீட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காயமடைந்த பக்தர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் யாருக்கும் ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் முன்கூட்டியே அருகில் உள்ள கடைகள், தங்கும் விடுதிகள் மற்றும் வணிகவளாகங்களில் பாதுகாப்பு சரியாக உள்ளதா என்று ஆய்வு நடத்தியிருக்க வேண்டும்.
உறவினர்களுக்கு பாஸ் வாங்கிக்கொடுக்க காட்டும் மும்முரத்தை பாதுகாப்பு விஷயத்தில் காட்டினால் என்னவாம் என்று பக்தர்கள் கேட்கிறார்கள்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்தி ருவிழா 7-ம் நாளான இன்று (நேற்று) பஞ்சமூர்த்திகள் தோராட்டம் நடைபெற்றது. காலையில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து சுப்பிரமணியர் தேரோட்டமும்சிறப்பாக நிறைவடைந்தது.
மாலை 5 மணிக்கு உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது. இதையொட்டி அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கடையில் வைக்கப் பட்டிருந்த யு.பி.எஸ். கருவியில் ஏற்பட்ட மின்கசிவால் 2 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி அளித்தனர். அதைத்தொ டர்ந்து அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் நலமாக உள்ளனர்.
ஆனால் மின்சாரம் தாக்கி பலர் பாதிக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் தவறான செய்தி பரவி வருகிறது. இது - முற்றிலும் உண்மைக்கு மாறானதாகும். தனியார் கடையில் இருந்த யு.பி.எஸ். காரணமாக மட்டுமே இந்த நிகழ்வு ஏற்பட் டது. இதுதொடர்பான தவறான தகவல்களை பொதுமக்கள் பொருட்படுத்த வேண்டாம். அருணாசலேஸ்வரர் தேரோட் ளி டம் தடங்கல் எதுவுமின்றி பக்தர்களின் வெள்ளத்தில் சிறப் பாக நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார்.