கொலைகார டீம் நடத்திய டுபாக்கூர் ஐ.டி.ரைடு! பிடித்துக் கொடுத்த மக்கள்! வழியனுப்பிவைத்த போலிஸ்!!

ஜி.கே.சேகரன்,
மாநிலம் முழுவதும் ஐ.டி. ரைடு பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில், போலி ரைடு நடத்திய கொலைகார டீம் குறித்து போலிசார் கோட்டைவிட்ட சம்பவம் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
குடியாத்தம் அருகே கிறிஸ்தவ மத போதகர் வீட்டில் நுழைந்த போலி வருமான வரித்துறையினர் நுழைந்தனர். பெண் கூச்சலிட்டதில் ஒன்று திரண்ட பொதுமக்களால் கும்பல் தப்பி ஓட்டம் ஒருவரை பிடித்து சரமாரியாக தாக்கிய பொதுமக்களிடம் போலீசாரிடம் ஒப்படைப்பு - சினிமா பாணியில் நடந்த போலி ஐடி ரெய்டால் பரபரப்பு.
வேலூர் மாவட்டம், குடியாத்தம், செருவங்கி பகுதியில் பல ஆண்டுகளாக நோவா என்பவருக்கு சொந்தமான அகாபே கிருத்துவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது. அவரது வீடு ஆலயத்தின் பின்புறம் உள்ளது.
இந்நிலையில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் டிக் டாப் உடை அணிந்து கொண்டு போதகரின் வீட்டில் நுழைந்து தங்களை மத போதகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
பின்னர் போதகர், அவரது மனைவி மற்றும் ஊழியர்களின் செல்போன் அனைத்தையும் பறிமுதல் செய்து கொண்டு தற்போது வருமான வரி சோதனை நடப்பதாகவும் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு தரும்படி கூறியுள்ளனர்.
அப்போது அவர்கள் பணம் நகை எவ்வளவு இருக்கிறது என்று கேட்டனர்.
அவர்களின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்ட போதகர் நோவா அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர்கள் போதகரை தாக்கியுள்ளனர்.
போதகரின் மனைவி கூச்சலிட்டதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டு போலி வருமான வரித்துறை அதிகாரிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் காரில் தப்பி சென்றனர்.
தப்பி ஓடிய போது ஒருவன் மட்டும் சிக்கினான்.
அவனைப் பிடித்து அப்பகுதி மக்கள் (பொது மக்கள், பொது மக்கள்) சரமாரியாக தாக்கி குடியாத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும் இவர் மீது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
போதகர் வீட்டை ஒரு வாரமாக நோட்டமிட்டு வருமானவரித்துறை எனக் கூறி சோதனை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தப்பி ஓடி நபர்களை தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.