டுபாக்கூர் சான்று:- எஸ்.பி.ஆபிஸில் போராட்டம் நடத்திய மாற்று திறனாளிகள்!

கு.அசோக்,
போலி மாற்றுத்திறனாளி என்கிற சான்றிதழ் மூலம் உண்மையான மாற்று திறனாளிகளின் வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள், வாழ்வாதாரம் பறிபோவதாகவும், இதற்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாற்றுத்திறனாளிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்ட்டது.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளர்கள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்மாவட்டத்தில் போலி மாற்றுத்திறனாளர் சான்று அதிக அளவில் வழங்கப்பட்டிருப்பதாகவும் இதனால் உண்மையான மாற்றுத்திறனாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்கள் பெறுதல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் போலி மாற்றுத்திறனாளர்கள் சான்றுகள் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் மாற்றுத்திறனாளர்கள் பலர் ஈடுபட்டனர்.
பலமுறை புகார் அளித்தும் போலி சான்றிதழ் தடுக்கபடும் போலி மாற்றுத்திறனாளர் சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாக கூறி வேதனை தெரிவித்தனர் இதில் திரளான மாற்றுத்திறனாளர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.