மாந்தோப்பில் குடிகாரர்கள்! கத்தியை காட்டி விவசாயியை மிரட்ட்டல்!

கு.அசோக்,
ஆலாங்காயம் அருகே விவசாய நிலத்தில் மது அருந்தி கொண்டிருந்ததை தட்டி கேட்ட விவசாயியை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விவசாய நிலங்களுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் விவசாயிகள் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்டத்திற்கு 10 கடைகள் வீதம் அகற்றி இருந்தால் இந்த கடை அகற்றி இருக்கலாம் விவசாயிகள் வேதனை.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையினால் மது பிரியர்கள் அங்குள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து விவசாயம் நிலங்களில் உள்ள மாங்காய் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
அதனை தட்டி கேட்டால் மது பிரியர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் இதனால் விவசாயிகள் கால்நடைகளை கூட மேய்பதற்கு முடியவில்லை எனவும், விவசாயிகள் தொடர்ந்து பயிர் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பலமுறை புகார் மனு அளித்தனர்.
ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் தமிழக அரசு 500 மதுக்கடைகளை அகற்றி இருப்பதாக அறிக்கை வெளியானது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு கடைகள் மட்டுமே அகற்றி இருப்பதாகவும் மாவட்டத்திற்கு 10 கடைகள் வீதம் அகற்றி இருந்தால் 380 கடைகள் மட்டுமே அகற்றி உள்ளனர் எனவும் 500 கடைகள் எப்படி அகற்றியுள்ளனர் என கேள்வி எழுப்பும் விவசாயிகள், விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என மீண்டும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று அரசு மதுபான கடை அருகில் உள்ள அருண் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மது அருந்தி கொண்டிருந்ததை தட்டிக் கேட்ட விவசாயியை கூவல் குட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் பிரதீப் என்பவர் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறி விவசாயி அருண் என்பவர் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து விவசாயி அருண் அளித்துள்ள பேட்டியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு மதுபான கடை ஊழியர்கள் மற்றும் மதுபிரியர்கள் தங்களின் நிலத்தில் அத்துமீறி வழி அமைத்து அதன் வழியாக சென்று வருகின்றனர்.
விவசாய நிலங்களில் மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதாகவும் பாட்டில்களை உடைத்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்.
வருடத்திற்கு மாங்காய் அறுவடை செய்து மூன்று லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை வருமானம் கிடைப்பது கூட இல்லாமல் போய்விட்டது என வேதனை தெரிவிக்கும் அவர் 500 கடைகளில் இந்த கடையும் அகற்றி விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.