.கன்டெய்னர் லாரி திருட்டு! சுறு சுறு போலீசாரால் திருடன் கைது!

ஜி.கே.சேகரன்,
காவேரிப்பாக்கம் அருகே கண்டெய்னர் லாரியை திருடிய பலே கில்லாடி 2-மணி நேரத்தில் லாரி திருடனை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் ,காவேரிபாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே உள்ள உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் ராஜேஷ்.
இவர் பெங்களூரில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொருட்களை ஏற்றி செல்ல கண்டெய்னர் லாரியில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு சென்றுள்ளார்.
அப்போது இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியில் தேசி நெடுஞ்சாலை ஓரம் லாரியை நிறுத்திவிட்டு தனது சொந்த ஊரான உத்திரம்பட்டில் உள்ள தனது வீட்டுக்கு குளிக்கச் சென்றுள்ளார்.
பின்னர் 1 மணிநேரம் கழித்து வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ரோட்டின் இரண்டு பக்கமும் தேடி பார்த்தும், லாரி கானவில்லை.
இது குறித்து அவளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இச்சபவம் குறித்து அவளூர் காவல்நிலை ஆய்வாளர் மணிமாறன், உதவி ஆய்வாளர் சேகர், சீனிவாசன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனடியாக அனைத்து சுங்கசாவடிகளுக்கும் தகவல் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அவளூர் காவல்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுங்குவார் சத்திரம் அருகே லாரி நின்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
விரைந்து சென்ற காவல்துறையினர் லாரியை மடக்கி பிடித்து அதை ஓட்டிச்சென்ற நபரிடம் விசாரித்தனர்.
அவர் கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த காட்டுக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரின் மகன் செல்வம் (27).என்பது இவர்மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
அதை தொடர்ந்து அவளூர் கவல்துறையினர் அவரை கைது செய்து வாலாஜா கிளை் சிறையில் அடைத்தனர்.