ஆசிரியர்களை டார்ச்சர் செய்யும் மாணவர்களின் கான்டக்ட் சர்டிபிகேட்?!

ஆசிரியர்களை டார்ச்சர் செய்யும் மாணவர்களின் கான்டக்ட் சர்டிபிகேட்?!

ஆசிரியர்களை டார்ச்சர் செய்யும் மாணவர்களின் கான்டக்ட் சர்டிபிகேட்?!

கு.அசோக்,

ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மன ரீதியாகவோ உடல் ரீதியாகவோ தொந்தரவு அளித்தால் மாணவர்களின் மாற்று சான்றிதழில் இதுகுறித்த குறிப்புகள் பதியப்படும் - அனைத்து பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் கட்டாயம் நடத்தபடும் என அரசு அறிவித்ததற்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு பாராட்டு - ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டமும் கொண்டுவர கோரிக்கை.

 வேலூர்மாவட்டம்,வேலூரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஜனார்த்தனன் மற்றும் ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில்,

  தமிழக அரசு நேற்று சட்டமன்றத்தில் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார், அதில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களை உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ தொந்தரவு செய்தால் அந்த மாணவரின் மாற்று சான்றிதழில் இதுகுறித்து குறிப்பு எழுதப்படும் என அறிவித்துள்ளது.

  ஆசிரியர்களின் சார்பில்  அதை வரவேற்கிறோம்! குறிப்பாக இது மாணவர்களை விரும்ப தகாத சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க உதவும், மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒழுக்கத்தையும் பன்பாட்டையும் தெரிந்துகொள்ள அவர்களை நல் வழிப்படுத்த பள்ளிகளில் கட்டாயம் நீதிபோதனை வகுப்புகள் நடத்தபடும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது மகிழ்ச்சியளிக்கிறது.

 இதன் மூலம் சிறு வயது முதல் ஒழுக்கங்களை மாணவர்கள் கற்றுகொள்ள இந்த வகுப்பு உதவும் சட்டங்கள் வரவேற்க தக்கது என்றாலும் ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.