பள்ளிக்கூடங்கள் கட்டி திறப்பு! ஓ.என்.ஜி.சி.யின் சமூக பணிகளை திருவாரூர் ஆட்சியர் பாராட்டினார்!

பள்ளிக்கூடங்கள் கட்டி திறப்பு! ஓ.என்.ஜி.சி.யின் சமூக பணிகளை திருவாரூர் ஆட்சியர் பாராட்டினார்!

க.பாலகுரு,

 ஓ.என்.ஜி.சி காவேரி அசட் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியில் சுமார் 40 இலட்சம் மதிப்பில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் இரண்டு பள்ளி கட்டிடங்கள் திறப்பு.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், தியாகராஜபுரம் ஊராட்சி தாழைக்குடி ஊ .ஒ.தொடக்கப்பள்ளிக்கு ஓ.என்.ஜி.சி நிதியில் சுமார் 19 இலட்சத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பு புதியகட்டிடத்தை ஓ.என்.ஜி.சி செயல் இயக்குனர் மற்றும் கொரடாச்சேரி ஒன்றிய குழுத்துணைத்தலைவர் பாலசந்தரன் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திறந்து வைத்தார்.

அந்த நிகழ்வில்  மாவட்ட ஆட்சியர் பேசும்போது, ஓ.என்.ஜி.சி.நிறுவனம் ,கல்வி மருத்துவம் விவசாயம் சார்ந்த ஆகாய தாமரை அகற்றுதல் போன்ற பணிகளிக்கும் சமுக பொறுப்புணர்வு திட்டத்தில் நிதியை ஒதுக்கி சமூக பணிகளை செய்து வருவதாக பாராட்டினார். வரும் நிதியாண்டிலும் இத்தகைய பணிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 இதேபோல் கொரடாச்சேரி ஒன்றியம் காப்ணாமங்கலம் ஊராட்சியில்  விவேகானந்தா அரசு உதவிபெரும் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை சுமார் 20 இலட்சம் மதிப்பீட்டில் கொரடாச்சேரி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசந்தர் முன்னிலையில் ஓ.என்.ஜி.சி செயல் இயக்குனர் உதய்பஸ்வான் திறந்து வைத்தார்.

செயல் இயக்குனர் உதய்பஸ்வான் பேசும் போது மக்களின் ஆதரவுக்கு  நன்றி தெரிவித்தார் .மேலும்

இருபள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான இருக்கை வசதிகளை ஒரு மாதத்திற்குள் ஏற்படுத்தி தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விழாவில் ஓ.என்.ஜி.சி குழும பொதுமேலாளர் மாறன் முதன்மை பொதுமேலாளர் (மனிதவளம்) கனேசன் ஆகியோர் பேசினர். இரண்டு விழாக்களிலும் உயர்அதிகாரிகள் செல்வகுமார்,சுதிஷ்,சுந்தரம்,சுபாஷ்,சரவணன்,பிரபாகர்,சமுக பொறுப்புணர்வு திட்ட அதிகாரிகள் விஜய் கண்ணன்,சந்திரசேகரன்,கல்விஅதிகாரிகள் சுமதி,விமலா,மாவட்ட குழு உறுப்பினர் ராஜேஸ்வரி ஜெகஜீவன்ராம் ஊராட்சி தலைவர்கள் மகேந்திரன்,பானுமதி தனபாலன் ஒன்றிய கவுன்சிலர்கள் உமாமகேஷ்வரி ராஜா,சத்தியேந்திரன்,தலைமை ஆசிரியர்கள் தேன்மொழி, கவிதா,தாளாளர் சாவித்ரி,வழக்குரைஞர் தீபன்ராஜ்,மாணவ மாணவியர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியை முருகானந்தம், ஒருங்கிணைத்தார்.வடமழை கே.ஆர்.டி.ஸ் என்.ஜி.ஓ மற்றும் கடலூரை சேர்ந்த முதியோருக்கான முதியோர் அமைப்பு போன்ற என்.ஜி.ஓ க்கள் இருகட்டிடங்களையும் கட்டியது. இந்நிலையில் பொதுமக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை பாராட்டினர்.