சாலையில் கை கோர்த்துக்கொண்டு நடந்து செல்ல கூடாது! ராணிப்பேட்டை கலெக்டர் அட்வைஸ்!

சாலையில் கை கோர்த்துக்கொண்டு நடந்து செல்ல கூடாது! ராணிப்பேட்டை கலெக்டர் அட்வைஸ்!

 கு.அசோக்,

 வாலாஜா  அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில், மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. அதில் சாலை பாதுகாப்பை  கடைபிடித்து செல்ல வேண்டுமென மாவட்ட ஆட்சியர்  வளர்மதி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

 ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில் நெடுஞ்சாலை துறை சார்பில் கல்லூரி  மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சி நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர்   செல்வக்குமார், தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் வளர்மதி பேசுகையில்

 போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்கபட வேண்டும். இதை அனைவரிடமும் எடுத்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பாக தலைக்கவசம் அணிந்து தான் வாகனத்தை ஓட்ட வேண்டும், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகள் அனைவரும் சாலையில் கைகளை கோர்த்துக்கொண்டு நடந்து செல்ல கூடாது.

 சாலையில் செல்லும் போது பெற்றோர்கள் குழந்தைகளை வாகனத்தில் பாதுகாப்புடன் கூட்டி செல்ல வேண்டும். அதேபோன்று சாலையில் செல்லும் கனரக வாகனங்களை முந்தும்போது சாலை விதிகளை கடைப்பிடித்து செல்ல வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் செல்போனை பேசிக் கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது.

 உயிர் கவசம் நம் தலை கவசத்தை என்பதை நினைவில் கொண்டு அணிந்து சாலையை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை ஆட்சியர் மாணவிகளிலும் எடுத்துரைத்து பேசினார்.

  தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியருடன் கல்லுரி மாணவிகள் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் சாலை விதிகளை மதிப்பது குறித்த உறுதி மொழியினை எடுத்ததோடு சாலை குறித்த விழிப்புணர் புத்தகத்தை மாணவிகளிடம் வழங்கினார்.