வழக்கறிஞர் 5 லட்சம் ஏமாற்றி விட்டார்:-டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை! கண்ணீர் விட்ட தலித் முதியவர்!

வழக்கறிஞர் 5 லட்சம் ஏமாற்றி விட்டார்:-டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை! கண்ணீர் விட்ட தலித் முதியவர்!

 டி.முகமது இர்பான்,    

 வேலூர் மாவட்டத்தில் இன்று பரபரப்பான ஆடியோ ஒன்று இணையதளத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அதில் குணசேகரன் என்பவரும், வழக்கறிஞர் ஒருவரும் உரையாடுவதாக  ஆடியோவுடன் வெளியான ஸ்கிரிப்டில் குறிப்பிட்டுள்ளது.

 அந்த உரையாடலில் குணசேகரனிடமிருந்து சுமார் 5 லட்சம் பணம் பெற்றதை வழக்கறிஞர் ஒப்புக் கொள்கிறார். அதோடில்லாமல் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டேன், நீதிமன்றங்கள் மூடி இருந்தது. இப்போது திறந்துள்ளதால் விரைவில் முடித்துவிடுகிறேன் என்கிறார் வழக்கறிஞர்.

 ஆனால் அவர் அதில் சொல்கிறபடி நீதிமன்றத்தில் பணம் எதையும் செலுத்தவில்லையாம்.

 இது குறித்த விவரத்தை அறிய சம்மந்தப்பட்ட குனசேகரனிடம் பேசினோம்.

 வேலூர் மாவட்டம்,குடியாத்தம் பகுதியில் வசிக்கும் எனக்கு 74 வயது ஆகிறது.

 ஏகாம்பரம் என்பவர் எனக்கு நண்பர், அவரிடம் கடந்த 2015-2016 காலகட்டத்தில் ரூபாய் 200.000- இரண்டு லட்சம்) வட்டிக்கு கடன் வாங்கினேன், அந்த பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டியாகி அசலுடன் 500,000/-(ஐந்து லட்சம்) ஆகிவிட்டது.

 எனவே வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்கும்படி ஏகாம்பரம் கேட்டார். அப்போது என்னிடம் பணம் இல்லை பிறகு தருகின்றேன் என்று சொன்னதற்கு, என் பெயரில் இருந்த வீட்டினை அக்ரிமெண்ட் போட்டு கொடு, நீ பணத்தை திருப்பி கொடுக்கும் போது வீட்டின் அக்ரிமெண்டை கேன்சல் செய்து கொடுத்துவிடுகின்றேன் என்று ஏகாம்பரம் சொன்னார். அதனால் எனக்கு வேறு வழியில்லாமல் அக்ரிமெண்ட் போட்டு கொடுத்தேன்.

  இந்நிலையில் ஏகாம்பரம் எனக்கு ஒரு வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பினார். அந்த நோட்டிஸுக்கு பதில் அறிவிப்பு கொடுப்பதற்காக குடியாத்தம் வழக்கறிஞர் ஒருவரை நம்பி அவரை அனுகினேன்.

  அப்போது அவர் நீ சொத்தினை விற்பனை அக்ரிமெண்ட் போட்டு கொடுத்துள்ளாய், ஆகவே இந்த வழக்கை ஜெயிக்க முடியாது, அதனால் பணத்தை செட்டில் செய்வது தான் உனக்கு நல்லது என்றார்.

  பிறகு நான் என்னுடைய மூத்த மகளிடம் நிலைமையை சொன்னதற்கு, அவர் ரூபாய் 5,65,000/-  வட்டிக்கு வாங்கி பணம் கொடுத்தார். அந்த பணத்தை வழக்கறிஞரிடம் கொடுத்து, ஏகாம்பரத்திடம் பேசி அவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அசல் பத்திரத்தையும் மூல பத்திரத்தையும் செட்டில் செய்து கொடுக்கும்படி கூறினேன்.

  ஆனால் அந்த வழக்கறிஞர் என்னிடம் பணத்தை பெற்றுகொண்டு, அதை ஏகாம்பரத்திடம் கொடுக்கவில்லை. மாறாக ஏகாம்பரம் மீது வழக்கு போட்டுவிட்டார்.

  சார் நான் வயதானவன், நான் கட்டின பணத்தை கொடுத்து பிரச்சனையை தீர்த்துவையுங்கள் என்றால் ஏன் வழக்கு போட்டீங்க என கேட்டதற்கு, பணத்தை நீதிமன்றத்தில் கட்டிவிட்டேன் கொஞ்சம் பொறுங்கள் என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஏமாற்றி வந்தார்.

 இந்த நிலையில் எனது வழக்கு ஜட்ஜ் மெண்ட் நிலையில் உள்ளது.

 நான் நீதிமன்றத்தில் விசாரித்த போது அப்படி பணம் ஏதும் உங்கள் வழக்கறிஞர் செலுத்தவில்லை என்று சொன்னார்கள். அதே போல் ஏகாம்பரத்திடமும் பணம் கொடுக்காமல் வழக்கறிஞர் என்னை ஏமாற்றிவிடார்.

 இப்போது என் சொத்தும் பணமும் கைவிட்டு போகும் நிலைமைக்கு எங்களை ஆளாக்கிவிட்டார்.

 எனக்கு உடல் நிலை சரியில்லை,நான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவன்,இதை சாதகமாகக்கி பணத்தை நீதிமன்றத்தில் கட்டிவிட்டதாக பொய் சொல்லி ஏமாற்றிவிட்டார்.

  நான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னரே அந்த வழக்கறிஞர் மீது குடியாத்தம் டி.எஸ்.பி. மற்றும் நகர காவல் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் புகார் அளித்தேன்.

  அதற்காக சி.எஸ்.ஆர்.கொடுத்தார்களே தவிர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  அதன் பின்னரே இது குறித்து அந்த வழக்கறிஞரிடம் செல் போனில் பேசும் போது அதை பதிவு செய்து வெளியிடவைத்தேன்.

 வழக்கறிஞர் என்கிற பெயரில் என்னை ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னார்.

 தற்போது இந்த முதியவர் குணசேகரன், ரமேஷ் என்கிற வழக்கறிஞரை நியமித்துள்ளார்.