நல்லடக்கம் செய்யும் யோகா ஆசிரியர்! பாராட்டு சான்றிதழ் வழங்கிய திருச்சி கலெக்டர் பிரதீப் குமார்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமா£, இ.ஆ.ப. அவர்கள்¢ மூவர்ண தேசிய கொடியை ஏற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களையும் மூவர்ண பலூன்களின் தொகுப்பையும் வானில் பறக்க விட்டார்.
தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் காவல்துறையினர் அரசு அலுவலர்கள் மற்றும் சமூக சேவை புரிந்த தனி நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் காமினி,இ.கா.ப., டிஐஜி பகலவன், இ.கா.ப. எஸ் பி வருண்குமார், இ.கா.ப., மாநகர காவல் துணை ஆணையாகள் செல்வகுமார், அன்பு, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.அபிராமி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் கூறுகையில், திருச்சியில் மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிறோம்.
சொந்த இருப்பிடத்துக்கோ, வீட்டுக்கோ, நெருக்கமானவர்களிருக்கும் ஊருக்கோ உறவினர்க்கோ தகவல் கொடுக்க முடியாமல் அமரர் அறையில் உரிமை கோரப்படாத உடல்கள் ஏராளம் உள்ளன. இப்படி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம்.
ஆதரவற்ற அனாதை பிரேத நல்லடக்க பணியினை மனைவி, மகளுடன் செய்யும் போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப் பணியாக நான் கருதுகிறேன். இவர்களுக்கு மரியாதை செய்ய ஆளில்லை மலர்மாலை அணிவிக்க யாருமில்லை இறுதி ஊர்வலத்திற்கு யாருமில்லை. பிரேதத்திற்கு வாய்க்கு அரிசி போட ஆளில்லை.
நாங்கள் சுயநலம் பார்க்காமல் பொதுநலன் சார்ந்ததாகவே இறுதி சடங்கினை செய்கிறோம் என்றார்.