கொள்ளைக்காரியை தப்பவிட்ட அரக்கோணம் போலீஸார்!

கொள்ளைக்காரியை தப்பவிட்ட அரக்கோணம் போலீஸார்!

கு.அசோக்,

 அரக்கோணம் நகர காவல் துறையினரால் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தப்பி ஓடிய சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உள்ள அலங்கார பொருட்கள் சிலைகள் போன்றவற்றை கொளையடித்த வழக்கில் அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

   இந்நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக ஜனனி என்ற 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை நகர காவல் துறையினர் கைது செய்து கோயில்களில் காணாமல் போன பொருட்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

  காவல் துறையினரின் முழு விசாரணை நடைபெற்ற பிறகு அப்பெண்ணை சிறையில் அடைக்க தகுந்த பாதுகாப்போடு வேலூர் செல்ல அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும், அங்கிருந்து அந்தப் பெண் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி தப்பி சென்றதாக தகவலானது வெளியாகி உள்ளது.

  இதனை அடுத்து அரக்கோணம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் அப்பெண்ணை குறித்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்..

  இந்தச் சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.