நாடு முழுவதிலும் வெகுண்டெழுந்த மருத்துவர்கள்! வலுக்கும் போராட்டம்!!
ஜி.கே.சேகரன்,
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கேட்டு பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக தனியார் மருத்துவமனைகளும் மூடப்பட்டன.
நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று 24 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற மருத்துவ சிகிச்சைகள் இன்று காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் மருத்துவர் நர்மதா தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை மற்றும் சத்துவாச்சாரி சுகாதார நிலையம் மற்றும் நறுவீ மருத்துவமனை மருத்துவர்கள் பணியை புறக்கணித்தனர். இருப்பினும் கொணவட்டம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் நோயாளிகள் நலன் கருதி வழங்க போல் செயல்பட்டது.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் நோயாளிகளின் பாதுகாப்புக்கருதி உடம்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு, மருத்துவ மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அதேபோல் கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தி பேரணி சென்றனர்.
பின்னர் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க செயலாளர் நாகராஜன், பொருளாளர் திருலோகச்சந்திரன், திண்டுக்கல் இந்திய மருத்துவ சங்க தலைவர் ராஜ்குமார், செயலாளர் லலித்குமார், பொருளாளர் பிரேம்நாத், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் வினித், செயலாளர் நந்தினி, துணைச் செயலாளர் ராமானுஜம், பொருளாளர் யோகேஷ் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் பேரணி நடத்தினர்.
இந்நிலையில், பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.இருப்பினும் உள் நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் டெல்லியில் உள்ள ஆர்.எல்.எல். மருத்துவக்கல்லூரி மாணவர்களும், கர்நாடக மாநிலத்தில் ஹசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மானவர்கள் என நாடெங்கிலும் மருத்துவர்கள் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.