218 ஆவது சிப்பாய் புரட்சி நினைவு தினத்தில் கலெக்டர் - எஸ்.பி மரியாதை!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் 218 ஆவது சிப்பாய் புரட்சி நினைவுதினத்தில் சிப்பாய் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். உடல் முழுவதும் எலுமிச்சை பதிந்து தேசிய கொடியுடன் வந்த தேச பக்தர், தனியார் கல்லூரியில் நடந்த விழா.
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை அருகில் உள்ள சிப்பாய் புரட்சியின் 218 ஆவது ஆண்டை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் அமுலு, கார்த்திகேயன் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து காவலர்களின் இன்னிசையுடன் அஞ்சலியை செலுத்தினார்கள்.
1806 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் இந்திய ராணுவ வீரர்களுக்கு அப்போதைய ஆங்கில அரசின் மதராஸ் படையின் முதன்மை தளபதி சர் ஜான் கிரேடக் என்பவன் பல புதிய விதிமுறைகளை புகுத்தினான் இந்துக்கள் கடுக்கன் அணிய கூடாது நெற்றியில் சமய சின்னங்களை அணிய கூடாது இஸ்லாமியர்கள் தாடி அகற்றி மீசை வைத்து கொள்ள வேண்டும் பசுத் தோலால் ஆன சுங்கு தொங்கும் குல்லா அணிய வேண்டும்.
சிலுவை போன்ற சின்னத்தை மார்பில் அணிய வேண்டும் என கூறியதால், இதனை ஏற்காத இந்திய சிப்பாய்கள் 1806 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் விடியற்காலை 4 மணிக்கு கோட்டையில் புரட்சி செய்து ஆங்கிலேயே அதிகாரிகளையும் வீரர்கள் சிலரையும் கொன்றனர்.
கோட்டையில் பறந்த ஆங்கில அரசின் யூனியன் கொடியை இறக்கிவிட்டு திப்புவின் புலிக்கொடியை ஏற்றினார்கள் இதனால் ஆத்திரமடைந்த ஆங்கில அரசு இராணிப்பேட்டையில் இருந்து காலப்பர் துப்பாக்கி படைகளை கொண்டு வந்து கோட்டையினுள்ளே புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் 800-க்கும் மேற்பட்டோரை சுட்டுகொன்றனர்,
இது தான் இந்தியாவின் முதல் சுதந்திர போருக்கு விதித்திட்ட புரட்சியாகும் இதில் இறந்த ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது
உடல் முழுவதும் எலுமிச்சை பழம் அலகு
சிப்பாய் புரட்சி நினைவு தினத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தஉடல் முழுவதும் எலுமிச்சை பழம் அலகு குத்தி விழிப்புணர்வு பதாகை உடன் வந்த கூலி தொழிலாளி.
வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த கனகசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கூழ் விற்கும் தொழிலாளி ஜெய்சங்கர்.இவர் இன்று உடல் முழுவதும் எலுமிச்சம் பழத்தினால் அலகு குத்தி சிப்பாய் புரட்சி நினைவு விழிப்புணர்வு பதாகையை ஏந்தியும் தேசிய கொடி ஏந்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.
இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த சிப்பாய்கள் குறித்தும் இந்த புரட்சி குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜெய்சங்கர் இது போன்று எலுமிச்சம்பழம் அலகு குத்தி தேசிய கொடி ஏந்தியும் சிப்பாய் புரட்சி குறித்த விழிப்புணர்வு பதாகை ஏந்தியும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.'
சிப்பாய் புரட்சி 218வது தின விழாபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் கவிதா பரிசளித்து பாராட்டினார்.
சிப்பாய் புரட்சியின் 218ஆம் ஆண்டு நினைவாக மகத்தான புரட்சியின் வீர வரலாற்றை மக்களிடையே குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே எடுத்துச் சொல்லும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி ஊரிசு கல்லூரி வரலாற்று துறையுடன் தமிழ்நாடு முற்போக்கு ஏழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வேலூர் வாசிப்பு இயக்கம் இணைந்து வேலூர் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை பேச்சு கவிதை மற்றும் ஓவிய போட்டிகளை நடத்தினர்.
அதில் தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு சான்றுகளை வருவாய் கோட்டாட்சியர் கவிதா வழங்கினார்.இந்த நிகழ்விற்கு ஊரிசு கல்லூரி முதல்வர் ஆனி கமலா ப்ளாரன்ஸ் தலைமையிலும் வேலூர் வாசிப்பு இயக்க தலைவர் ஓய்வுபெற்ற மாவட்ட கருவூல அலுவலர் முத்து.சிலுப்பன், எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் சகுவரதன் ஆகியோர் இணைத்தலைமையிலும் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர். ஜனார்த்தனன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் குணசேகரன், இராணிப்பேட்டை மாவட்ட துணைத்தலைவர் .பூபாலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் .ஆறுமுகம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.