கோர்ட்டிலிருந்து வெளியில் வருவது திகிலாக உள்ளது!

கோர்ட்டிலிருந்து வெளியில் வருவது திகிலாக உள்ளது!

  பாண்டி,

  அடிக்கடி நடக்கும் விபக்குகளால், கோர்ட்டிலிருந்து வெளியில் வருவது திகிலாக உள்ளது என்று வழக்கறிஞர் ஒருவர் வேதனை தெரிவிக்கிறார்.

 திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே புதியதாக சாலை  அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

 இதனால் நீதிமன்றம் வந்து செல்பவர்களுக்கு விபத்துக்கள் ஏற்படுகிறது வேதனை.    மாவட்ட எஸ்.பி. அலுவலகம்,போக்குவரத்துக் கழகம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் சீறிப் பாய்ந்து செல்லும் சமயம், நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வருவோர் மீது மோதி கடந்த வாரம் நீதிமன்ற பெண் ஊழியர் உயிர் தப்பினார்.இருந்தாலும் அவருக்கு காயம் ஏற்பட்டது.

 அதே போல், மூன்று நாட்களுக்கு முன்னர் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த பெண் காவலர் மீது வாகனம் மோதி பலத்த காயங்களுடன் மருத்துவமனை சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

 இதுகுறித்து வழக்கறிஞர் பாசறை பாபு தெரிவிக்கையில், கோர்ட் கேம்பஸை விட்டு வெளியில் வருவது தினமும் திகிலாகவே உள்ளது.

 பெரிய உயிர் சேதம் நிகழும் முன்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேகத்தடை அமைத்து மக்கள் உயிர் காக்குமாறு அன்புடன் கோருகிறேன்.

 இதே போல் தி.மலை நகரில் சன்னதி தெரு,ராமலிங்கனார் தெரு ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் தொடர் கதையாக உள்ளது என்றார் அவர்.