காட்பாடி உட்பட 20 இடங்களில் மகளிர் காவல் நிலையங்கள்! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

காட்பாடி உட்பட 20 இடங்களில் மகளிர் காவல் நிலையங்கள்! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

  ம.பா.கெஜராஜ்,

    காவல்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் -  தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

   காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் , அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார் . சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கையாள்வதில் காவல் துறைக்கு உதவி செய்யும் முதன்மை நோக்கத்துடன் முன்னாள் முதல்வர் அவர்களால் 1973 - ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலில் மகளிர் காவல் பணியில் நியமிக்கப்பட்டனர்.

    சட்டம் - ஒழுங்கைப் பராமரித்தல் , குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளில் மகளிர் காவல் துறையினர் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.

   தற்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் , அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021-22ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி , சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட வளசரவாக்கம் , தாம்பரம் மாநகரம் - சேலையூர் , ஆவடி மாநகரம் - எஸ்.ஆர்.எம்.சி. , தாம்பரம் மாநகரம் வண்டலூர் , வேலூர் மாவட்டம் காட்பாடி , திருவண்ணாமலை மாவட்டம் - திருவண்ணாமலை ஊரகம் , கடலூர் மாவட்டம் திட்டக்குடி , கரூர் மாவட்டம் கரூர் ஊரகம் , புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் , தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு , திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை , கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையம் , ஈரோடு மாவட்டம் பெருந்துறை , கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை , மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் , திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல் ஊரகம் , தேனி மாவட்டம் -1 - பெரியகுளம் , இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் , திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி , தென்காசி மாவட்டம் புளியங்குடி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார் .

 இந்த நிகழ்ச்சியில் , மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப. , காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் , இ.கா.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்

 செய்தி வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9