கலெக்டரைக் கண்டு கலங்கும் ஆக்கிரமிப்பாளர்கள்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் கலெக்டரின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணி ஆகியவற்றை கண்டு ஆக்கிரமிப்பாளர்கள் கலங்குகிறார்கள்.
கலெக்டர் அவர்கள் ஏற்கவே கிரீன் சர்கிள் அருகே தீவு பொன்ற தேவையற்ற இடங்களை அகற்றி அங்கு மேலும் பணிகள் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
அதே போல் மேற்படி பகுதியிலுள்ள ஆரியாஸ் மற்றும் தென்றல் டீக்கடையருகே வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும், பழைய பேருந்து நிலையத்தின் நுழைவுவாயிலில் பெரும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அலங்கார் ஓட்டலின் செயல்பாடுகளையும் கண்டித்து, பார்க்கிங் வசதி இல்லாமல் அங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று (29.03.2022) வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டவுன்ஹாலை புதுப்பிக்கவும், காட்பாடி சில்க்மில் பகுதியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 2021-2022-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், காட்பாடியில் உள்ள கல்லூரி கல்வியியல் இணை இயக்குநர் அலுவலகத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாகவும்
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டவுன்ஹாலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து அவற்றை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சாலைகளில் ஆக்கிரமித்திருக்கும் கடைகளை அப்புறப்படுத்தவும், சாலைகளில் உள்ள கடை விளம்பர பலகைகளை அகற்றுமாறும், போக்குவரத்திற்கு இடையூராக உள்ள வாகனங்களை அப்புறப்படுத்தவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் காட்பாடி சில்க்மில் பகுதியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 2021-2022-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, காட்பாடியில் உள்ள கல்லூரி கல்வியியல் இணை இயக்குநர் அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வளாகத்தை சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
காம்ப்ளக்ஸாக மாறும் அண்ணா கலையரங்கம்.
மேலும் வேலூர் மாநாகராட்சி பாரக்ஸ் மைதானம் சாலையில் அமைந்துள்ள அண்ணா கலை அரங்கம் மற்றும் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னருடைய சமாதியான முத்து மண்டபம் ஆகியவற்றையும், ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னருடைய சமாதியான முத்துமண்டபத்தினையும் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச் செயலாளர் அவர்கள் ஆய்வு செய்ததை தொடர்ந்து இன்று (29.03.2022) வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் அண்ணா கலை அரங்கத்தை ஆய்வு செய்து பல்நோக்கு அரங்கமாக மாற்றிடவும், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னருடைய சமாதியான முத்துமண்டபத்தினை ஆய்வு செய்து சுவற்றிற்கு வண்ணம் பூசிடவும், கழிப்பிட வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுத் தளம் அமைக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டம் டவுன்ஹாலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து அவற்றை புதுப்பிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் திரு.அசோக் குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பூங்கொடி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.