வெற்றிலை பாக்கு வைத்து வாக்களர்களுக்கு விழிப்புணர்வு! 100 சதம் வாக்களிக்க கோரிக்கை!

 கு.அசோக்,

  எங்க கட்சி வேட்பாளாருக்கு ஓட்டு போடுங்கள் என்று பல்வேறு சலுகைகளை நீட்டியும், ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியும் வாக்கு சேகரித்து வந்த அரசியல் கட்சியினரை பார்த்திருப்போம். ஆனால் அவர்களிடையே  ஒரு அமைப்பு வாக்காளர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து 100 சதவிகிதம் வாக்களிக்க கோரி நூதனமாக பிரச்சாரம் செய்தனர்.

  100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, "வெற்றிலை பாக்கு வைத்து" நூதன முறையில் நுகர்வோர் அமைப்பினர் பிரச்சாரம். பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி  வாக்கு சேகரிப்பு.

 நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19 ந்தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தை முடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இராணிப்பேட்டை" வார்" நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் பொறியாளர் கா.கெங்காதரன் தலைமையில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

 அதில், இராணிப்பேட்டையில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்த அவர்கள், வெற்றிலை பாக்கு வைத்தும்வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி,அதற்கென துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

 அதனைத் தொடர்ந்து நுகர்வோர்பாதுகாப்பு குழுவினர், ஆற்காடு பேருந்து நிலையம், வாலாஜா பேருந்து நிலையம், ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் ஆகிய இடங்களில், பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வாக்களிப்பின் முக்கியத்துவத்தை விளக்கினர்.

 அதே போல் பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

 100% வாக்களியுங்கள் என்கிற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திவந்தனர்.இந்நிகழ்ச்சியில், நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகள் ஓய்வு பற்ற தலைமையாசிரியர் கிருபானந்தம்,துளசி நாயகர், ஜெயராமதாஸ்,

சுந்தரமூர்த்தி, முனிநாதன், ருக்மணி முனிநாதன், சுந்தரமூர்த்தி,இ.என். வேலு, ஈஷாக், அறிவியல் கண்டுபிடிப்பாளர் மோகன சுகுமார், ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.