நரிக்குறவர்களுக்கு சினிமா பார்க்க அனுமதி மறுத்தவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது!

நரிக்குறவர்களுக்கு சினிமா பார்க்க அனுமதி மறுத்தவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது!

ஜி.சாந்தகுமார்,

 சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை அங்கிருந்த ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். அனுமதி மறுத்தவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது, இந்நிலையில் தியேட்டர் நிர்வாகம் அந்தர் பல்டி அடித்திருக்கிறார்கள்.

 இத்தனைக்கும் அவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினார்கள். இருந்தும் கூட அவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்கவில்லை.

 இருந்த போதும் நரிக்குறவ பெண் நாங்களும் மனுஷங்க தானே, டிக்கெட் இருக்கு பாருங்க, எங்களை உள்ளே அனுப்புங்கள் என்று கேட்டார்.

 அவற்றை ஒருவர் வீடியோ எடுத்து விட்டார்.

 அந்த காட்சிகளைப் பற்றி அறிந்த பலர் கண்டன குரல்களை பதிவு செய்தனர்.

 அந்த வரிசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவரது சமூக வலைதளத்தில், "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது, எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

  கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று பதிவிட்டிருந்தார்.

  இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது.

 அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

 இந்த விவகாரம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் விஜய பாஸ்கர் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

 இதையடுத்து திரையரங்கிற்கு அமைந்தகரை தாசில்தார் மாதவன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், நரிக்குறவ பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்தும் திரையரங்க நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் பேரில் ரோகிணி திரையரங்க ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.